[Representative Image]
தமிழகத்தில் 4 ஐபிஎஸ் அதிகாரிகளை மாற்றம் செய்து உள்துறை செயலாளர் அமுதா உத்தரவு பிறப்பித்துள்ளார்.
தமிழக காவல்துறையில் நான்கு ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக உள்துறை செயலாளர் அமுதா ஐஏஎஸ் நேற்று உத்தரவு பிறப்பித்தார். இதில் தமிழக காவல்துறையின் உளவுத்துறைக்கு மட்டும் கூடுதல் டிஜிபி ஆக இருந்த டேவிட்சன் தேவாசீர்வாதம் தலைமை கூடுதல் டிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஆவடி காவல் ஆணையராக பணியில் இருந்த ஏ.அருண் ஐபிஎஸ், சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபியாக பணி மாற்றப்பட்டுள்ளார். ஏற்கனவே அந்த பொறுப்பில் இருந்த கேசங்கர் ஐபிஎஸ் ஆவடி காவல் ஆணையராக மாற்றப்பட்டுள்ளார்.
அடுத்ததாக உளவுத்துறை ஐஜி-ஆக இருந்த செந்தில் வேலன் உளவுத்துறை கூடுதல் டிஜிபி-யாக கூடுதல் பொறுப்பையும் கவனிக்க உள்ளார் என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்ததாக தலைமை டிஜிபி சைலேந்திரபாபு வரும் 30ஆம் தேதி ஓய்வு பெற உள்ள நிலையில் அந்த பதவிக்கு யார் வருவார் எனவும் விரைவில் அறிவிக்கப்படும் என கூறப்படுகிறது.
டெல்லி : வளர்ச்சியடைந்த பாரதம் என்ற தலைப்பில் பிரதமர் மோதி தலைமையில், நிதி ஆயோக்கின் நிர்வாக குழு கூட்டம் நடைபெற்றது. டெல்லியில்…
குஜராத் : பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்குள் எல்லை தாண்டி வந்த பாகிஸ்தானியரை சுட்டுக் கொன்றதாக இந்திய எல்லைப் பாதுகாப்புப் படை…
டெல்லி : வருகின்ற ஜூன் 20 ஆம் தேதி தொடங்கும் இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான…
சென்னை : டெல்லியில் இன்று பிரதமர் மோடி தலைமையில் நடந்த நிதி ஆயோக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். முன்னதாக,…
டெல்லி : 'Son of Sardaar', 'Jai Ho' 2 என 50-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள பிரபல பாலிவுட்…
கேரளா : கேரளாவில் 8 நாட்கள் முன்கூட்டியே தென்மேற்கு பருவ மழைத் தொடங்கியதாக இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD)…