பெற்ற குழந்தையை கால்வாயில் வீசிய கொடூர தாய்!கள்ளத்தொடர்பால் ஏற்பட்ட விபரீதம்!

Published by
Sulai
  • பெற்ற குழந்தையை கழிவுநீர் கால்வாயில் வீசி கொன்ற கொடூர தாய்.கள்ளத்தொடர்பால் ஏற்பட்ட விபரீதம்.
  • பின்னர் கொலை வழக்கு பதிவு செய்து குற்றவாளியை கைது செய்த காவல்துறையினர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள வாலாஜாபாத்தை சேர்ந்தவர் விநாயகம் ஆவார்.இவரது மனைவி மீனாட்சி ஆவார்.இருவரும் கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளனர்.

இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் பிறந்தும் இரண்டு குழந்தைகளும் இறந்துள்ளது.பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக கணவன் விநாயகத்தை பிரிந்து மீனாட்சி சென்னை நுங்கம்பாக்கத்தில் வசித்து வந்துள்ளார்.

அப்பகுதியில் கட்டிட பணியாளர் தொழில் செய்து வந்துள்ளார்.அப்போது கட்டிட மேற்பார்வையாளருக்கும் மீனாட்சிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது.அது நாளடைவில் கள்ளத்தொடர்பாக மாறியுள்ளது.

இதன் காரணமாக மீனாட்சி கற்பமாகியதன் காரணமாக கட்டிட தொழில் மேற்பார்வையாளர் அவரை கைவிட்டு தலைமறைவாகியுள்ளார்.பின்னர் நிறைமாத கர்ப்பிணியாக இருந்த மீனாட்சி கோவிலுக்கு செல்லும் வழியில் திண்டிவனம் அருகே பிரசவ வலி ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட மீனாட்சி ஒரு ஆண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார்.பின்னர் குழந்தைக்கு மஞ்சள் காமாலை இருப்பதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

இதனால் மனமுடைந்த மீனாட்சி நோயுடன் இருக்கும் குழந்தையை எப்படி வளர்ப்பது என்று எண்ணி பச்சிளம் குழந்தை என்று கூட பாராமல் கொலை செய்ய முடிவெடுத்துள்ளார்.இதன் காரணமாக விழுப்புரம் உள்ள கோலியனூரான் கழிவு நீர் கால்வாயில் குழந்தையை வீசியுள்ளார்.

இதனை கண்டு அதிர்ச்சி அடைத்த அப்பகுதி மக்கள் உடனே காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர்.பின்னர் மீனாட்சியும் அந்த கழிவுநீர் கால்வாயில் குதித்துள்ளார்.சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் இருவரையும் மீட்டுள்ளனர்.

பின்னர் குழந்தையை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.அங்கு குழந்தையை பரிசோதனை செய்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர்.இந்நிலையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

பின்னர் குற்றவாளி மீனாட்சியை கைது செய்த காவல்துறையினர் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றன.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Recent Posts

சதம் அடிக்கிறதுல நான் ஸ்பெஷல்! வரலாற்று சாதனை படைத்த ரிஷப் பண்ட்!

சதம் அடிக்கிறதுல நான் ஸ்பெஷல்! வரலாற்று சாதனை படைத்த ரிஷப் பண்ட்!

லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட், இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் (ஜூன்…

2 hours ago

இரவு 10 மணி வரை இந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் அலர்ட்!

மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது இதன் காரணமாக…

3 hours ago

ரோ-கோ இல்ல கேட்ச் விட்டீங்கனா ஒரு போட்டியை கூட வெல்ல முடியாது! இந்தியாவை எச்சரித்த ஸ்டூவர்ட் பிராட்!

லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…

3 hours ago

நீட் தேர்வில் ஆதி முதல் அந்தம் வரை பணம் தான்! முதல்வர் ஸ்டாலின் கண்டனம்!

சென்னை :  2025 நீட் (NEET-UG) தேர்வு முறைகேடு தொடர்பாக மத்திய புலனாய்வு அமைப்பு (CBI) மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஒரு…

4 hours ago

உதவி கேட்டு கடிதம் அனுப்பிய ஈரான்! “நாங்க ரெடி” என உறுதி கொடுத்த ரஷ்யா!

ரஷ்யா : இஸ்ரேல் vs ஈரான் இடையே  11-வது நாளாக கடுமையாக போர் நடைபெற்று வருகிறது. இந்த போர் எப்போது முடிவுக்கு…

5 hours ago

“நல்ல பவுன்ஸ் இருக்கு மச்சி”…சாய் சுதர்சனிடம் தமிழில் பேசிய கே.எல்.ராகுல்!

லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…

6 hours ago