தாலுகா போக வேண்டாம்.. ஆன்லைனில் பட்டா மாறுதலுக்கு விண்ணப்பிப்பது எப்படி?

Published by
கெளதம்

பட்டா மாறுதல் :  டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் இலக்கை அடைய பல மாநிலங்கள் தங்கள் நிலப் பதிவுகளை டிஜிட்டல் மயமாக்கியுள்ளன. அது ஒரு பகுதியாக, தமிழக அரசின் சேவைகளை பொதுமக்களுக்கு உதவும் வகையிலும், மிகவும் எளிதாக கிடைக்கும் வகையிலும், பல துறைகள் சார்ந்த சேவைகள் ஆன்லைன் முறையில் கிடைக்கிறது. அந்தவகையில், பட்டா மாறுதலும் ஆன்லைனில் செய்து கொள்ளலாம்.

பட்டா

பட்டா என்பது சட்டப்பூர்வ உரிமையாளர் பெயர்களைக் கொண்ட நிலப் பதிவு ஆவணமாகும். தமிழகத்தில் நிலம் வாங்கும் முன் பட்டா ஆவணத்தை சரிபார்க்க வேண்டும். காரணம் நிலத்தின் சரியான உரிமையாளரிடமிருந்து நீங்கள் சட்டப்பூர்வமாக வாங்குகிறீர்களா என்பதை இது உறுதி செய்யும்.

பட்டா மாறுதல் 

நில ஆவணங்களை மாற்றுவதற்கு தனிநபர்கள் பொது சேவை மையங்களுக்கோ (இ-சேவை)அல்லது துணைப் பதிவாளர் (தாலுகா) அலுவலகங்களுக்கோ செல்ல வேண்டிய அவசியமில்லை. பட்டா ஆவணங்களை மாற்றுவதற்கு பதிவு செய்ய விரும்பும் மக்கள் அதன் அதிகாரப்பூர்வ இணையததளத்திற்குச் சென்று பதிவு செய்யலாம்.

பட்டா மாறுதல் அவசியம் ஏன்?

நிலம், வீடு உரிமையாளர் கண்டிப்பாக பட்டா வைத்திருப்பது அவசியமாகும். இதன் மூலமே அவரது உரிமை அந்த நிலம், வீடு மீது நிலைநாட்டப்படும். எனவே, இன்னொருவரிடம் இருந்து புதிதாக ஒருவர் இடம், வீடு வாங்கும்போது, அவர் பெயரிலுள்ள பட்டாவை தனது பெயருக்கு மாற்றுவது அவசியம். இல்லையெனில் பின்னாளில் பிரச்னை வரக்கூடும். பட்டா மாறுதலுக்கு வீட்டில் இருந்தே எளிதில் விண்ணப்பிக்க முடியும்.

தேவைப்படும் ஆவணங்கள்

  1. ஆதார் அட்டை
  2. முகவரி
  3. விற்பனை பத்திரம்
  4. தீர்வு பத்திரம்
  5. பகிர்வு பத்திரம்
  6. பரிசுப் பத்திரம்
  7. பரிமாற்ற பத்திரம்
  8. விடுதலை பத்திரம்
  9. கைபேசி எண்
  10. மின்னஞ்சல் முகவரி

விண்ணப்பித்தற்கு முன் தெரிந்து கொள்ளவும்

  • அதிகாரப்பூர்வ வலைத்தளத்தைப் பார்வையிடவும் .
  • முகப்புப் பக்கம் திரையில் காட்டப்படும்.
  • இப்போது முகப்புப்பக்கத்தில் நீங்கள் புதியவர் என்பதை கிளிக் செய்யவும் .
  • ஒரு பதிவுப் பக்கம் திரையில் காட்டப்படும்.
  • உங்கள் பெயர், மின்னஞ்சல் ஐடி மற்றும் மொபைல் எண்ணை உள்ளிடவும்.
  • தமிழ்நாடு எங்கிருந்தும் எண்ணற்றதிலும் பதிவு
  • இப்போது பதிவு விருப்பத்தை கிளிக் செய்யவும்.
  • இந்த வழியில், நீங்கள் எளிதாக பதிவு செய்யலாம்.

ஆன்லைனில் பட்டா மாறுதலுக்கு விண்ணப்பிப்பது எப்படி?

தமிழக அரசின் https://tamilnilam.tn.gov.in /citizen/ என்ற இணையதளத்துக்கு சென்று, பெயர், மொபைல் எண், கேப்ட்சா, ஓடிபி உள்ளிட்டு முதலில் பயனாளராக பதிவு செய்ய வேண்டும். பிறகு உள்நுழைந்ததும் மீண்டும் மொபைல் எண், ஓடிபியை பதிவிட வேண்டும்.

அப்போது புதிதாக திறக்கும் திரையில் பெயர், முகவரி, உள்ளிட்ட விவரங்களை பூர்த்தி செய்ததும், 2ஆவதாக இன்னொரு புதிய பக்கம் திறக்கும். 2ஆவதாக திறக்கும் பக்கத்தில் எந்த வகை பட்டா மாற்றம் என்று பட்டியலிடப்பட்டுள்ளதில் ஒன்றை தேர்ந்தெடுக்க கோரப்பட்டிருக்கும்.

அதில், உங்கள் நிலப்பகுதி எந்த வகை என்பதை தெரிந்து, அந்த வகை பட்டா மாறுதலை தேர்வு செய்ததும், இன்னொரு பக்கத்தில் மாவட்டம், ஊர், ஆவணப்பதிவு எண், தேதி, பட்டா எண், நில வகை, பரப்பளவு உள்ளிட்டவற்றை உள்ளிட்டபின்னர், கட்டணம் செலுத்தி பட்டா மாறுதலுக்கு விண்ணப்பிக்கலாம்.

இதனை செய்த பிறகு, உங்களது விண்ணப்பம் சம்பந்தப்பட்ட தாசில்தாருக்கு அனுப்பப்படுகுறிது. அவர் தான், கிராம நிர்வாக அலுவலர், வருவாய் ஆய்வாளர் ஆகியோரிடம் விசாரணை நடத்தி பின், பட்டா மாறுதல் செய்யப்படும்.

பட்டா மாறுதலுக்கான கட்டணம்

கட்டணத்தை இணையவழியில் செலுத்த வேண்டும். யுபிஐ மூலமாகவும் கட்டணம் செலுத்தலாம். உட்பிரிவற்ற பட்டா மாற்றம் என்றால் விண்ணப்பக் கட்டணம் ரூ.60 செலுத்த வேண்டி இருக்கும். உட்பிரிவுடன் பட்டா மாற்றம் என்றால் அதற்கான தொகையாக ரூ.400, விண்ணப்பக் கட்டணம் ரூ.60 சேர்த்து செலுத்த வேண்டி இருக்கும்.

பட்டா மாறுதலை எவ்வாறு சரிபார்க்கலாம்?

மின் மாவட்ட இணையதளத்தில் உள்நுழைந்து பட்டா பரிமாற்ற நிலையைச் சரிபார்க்கலாம் . விண்ணப்ப ஐடி மற்றும் கேப்ட்சா மதிப்பை உள்ளிடுவதன் மூலம், உங்கள் பட்டா விண்ணப்பத்தின் தற்போதைய நிலையை சரி பார்த்து கொள்ளலாம்.

Published by
கெளதம்

Recent Posts

தனுஷின் ‘குபேரா’ எப்படி இருக்கு.? நெட்டிசன்கள் என்ன சொல்கிறார்கள்.! இதோ டிவிட்டர் விமர்சனம்.!

சென்னை : இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் 5 மொழிகளில் உருவாகியுள்ள மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 'குபேரா'…

52 minutes ago

”பட்டாசு விபத்தில் பலியானவர்களுக்கு ரூ.10 லட்சம் வழங்க வேண்டும்” – மதுரை கிளை உத்தரவு.!

மதுரை : தமிழ்நாட்டில் பட்டாசு ஆலைகளில் வெடிவிபத்துகள், குறிப்பாக விருதுநகர், சிவகாசி போன்ற பகுதிகளில் அடிக்கடி நிகழ்கின்றன. இந்த விபத்துகளில்…

1 hour ago

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட்: இங்கிலாந்து அணி பந்து வீச்சு.., சாய் சுதர்சன் அறிமுகம்.!

இங்கிலாந்து : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் டெஸ்ட் போட்டி இன்று…

2 hours ago

மைக்ரோசாஃப்ட் அலுவலகம் அருகே விழுந்த ஈரான் குண்டுகள்…, 5 பேர் படுகாயம்.!

இஸ்ரேல் : ஈரான்-இஸ்ரேல் பதட்டங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இஸ்ரேல் மீது ஏவுகணைத் தாக்குதல்களை ஈரான் தீவிரப்படுத்தி வருகிறது. முன்னதாக,…

3 hours ago

மளமளவென சரிந்த பங்குகள்.., ‘குற்றச்சாட்டுகள் தவறானவை’ – சன் டிவி குழுமம் விளக்கம்.!

சென்னை : நிதி முறைகேடு செய்து விட்டதாக, சன் நெட்வொர்க்கின் தலைவரும், தனது சகோதரருமான கலாநிதி மாறனுக்கு, முன்னாள் மத்திய…

4 hours ago

போரால் மகனின் திருமணம் 2 முறையாக ரத்து.! இஸ்ரேல் அதிபரின் சர்ச்சை பேச்சு.., கொந்தளிக்கும் நெட்டிசன்கள்.!

இஸ்ரேல் : ஈரானுடனான மோதல் காரணமாக தனது மகனின் திருமணம் இரண்டாவது முறையாக ஒத்திவைக்கப்பட்டதாகவும், இது தனது குடும்பத்தினர் செலுத்திய…

4 hours ago