விழுப்புரம் அருகே உள்ள வழுரெட்டி பகுதியை சார்ந்த ஜெயப்பிரதா இவர் கடந்த 2013-ம் ஆண்டு கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பூந்தமல்லி கிராமத்தை சார்ந்த சுரேஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
இந்நிலையில் இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ள நிலையில் கடந்த 2016-ம் ஆண்டு வீட்டை விட்டு சென்ற சுரேஷ் வீடு திரும்பததால் ஜெயப்பிரதா மற்றும் அவரது உறவினர்கள் சேர்ந்து பல இடத்தில் தேடியும் சுரேஷ் கிடைக்கவில்லை.இதனால் விழுப்புரம் தாலுகா காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.
மூன்று ஆண்டுகளாக போலீசார் தேடியும் சுரேஷ் கிடைக்கவில்லை.இந்நிலையில் சமீபத்தில் டிக் டாக் வீடியோவில் காணாமல் போன சுரேஷ் போல ஒரு நபர் திருநங்கை உடன் வீடியோவில் இருப்பதை பார்த்த ஜெயப்பிரதா உறவினர்கள் அந்த விடியோவை ஜெயப்பிரதாவிடம் காண்பித்தனர்.
இதில் இருப்பது எனது கணவன் தான் என ஜெயப்பிரதா கூற இதனை தொடர்ந்து விழுப்புரம் திருநங்கை அமைப்பு சார்ந்தவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அதில் அந்த திருநங்கை ஓசூரில் இருப்பதாக கூறினார்.
இந்நிலையில் ஓசூரில் சென்று விசாரணை செய்த போலீசார் அந்த திருநங்கையுடன் சுரேஷ் திருமணம் செய்து வாழ்ந்து வந்தாக தெரியவந்தது.பின்னர் சுரேஷை மீட்டு ஜெயப் பிரதாவிடம் ஒப்படைத்தனர். ஓசூரில் சுரேஷ் தனியார் டிராக்டர் கம்பெனியில் வேலை செய்து வந்த போது இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…
சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…
லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…