நிறைவேறிய ஆசை.! தங்கள் மனைவியை நடுரோட்டில் மண்பானையை போட்டு உடைப்பது போல பொத்தென்று போட்ட கணவர்கள்.!

Published by
பாலா கலியமூர்த்தி
  • வெளிநாடுகளில் மனைவியை கணவனும், கணவனை மனைவியும் தூக்கிக் கொண்டு ஓடுவது ஆரம்பத்தில் அங்கு நடத்தப்பட்டது.
  • தென்காசியில் நடந்த பொங்கல் விளையாட்டு போட்டியில் மனைவியை கணவன் தூக்கிச்செல்லும் போட்டி நடத்தப்பட்டது. போட்டியை காண வந்த கிராமவாசிகள் குதூகலமாக கொண்டாடப்பட்டு மகிழ்ச்சியடைந்தனர்.

பின்லாந்து நாட்டில் ஆரம்பிக்கப்பட்ட பொழுதுபோக்கான விளையாட்டாக மனைவியை கணவனும், கணவனை மனைவியும் தூக்கிக் கொண்டு ஓடுவது ஆரம்பத்தில் அங்கு நடத்தப்பட்டது. அதைத்தொடர்ந்து அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளிலும் இந்தப் போட்டி பிரபலமானது. தற்போது இந்த போட்டி சாம்பியன் சிப் போட்டியாக நீரிலும், நிலத்திலும், சகதியிலும் ஜோடிகளாக களமிறங்கி செல்லும் விதமாக மற்றும் பாதுகாப்பு விதிமுறைகளுடன் நடத்தப்படுகின்றது.

இந்நிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தின் தென்காசி மாவட்டத்தில் வீரசிகாமணி என்ற கிராமத்தில் நடந்த பொங்கல் விளையாட்டு போட்டியில் மனைவியை கணவன் தூக்கிச்செல்லும் போட்டி நடத்தப்பட்டது. அதுவம் தார்சாலையில் நடத்தப்பட்ட இந்த போட்டியில் தங்கள் மனைவிகளை குழந்தைகளை போல கையில் தூக்கிக் கொண்டும், முதுகில் உப்பு மூட்டை சுமந்து கொண்டும் கணவன்மார்கள் இருந்தார்கள். போட்டி ஆரம்பித்ததும், ஒருவரை ஒருவர் இடித்துக்கொண்டு மனைவிய தூக்கிக்கொண்டு ஓடினர்.

மனைவியை தூக்கிச்சென்ற கணவர்கள் 3 பேரும் தங்கள் மனைவியை நடுரோட்டில் மண் பானையை போட்டு உடைப்பது போல பொத்தென்று போட்டு அவர்களும் விழுந்தனர். மனைவியை உப்பு மூட்டை போல சுமந்து சென்ற இருவர் மட்டும் வெற்றிகரமாக எல்லைக் கோட்டை தொட்டனர். தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் இன்றி குறுகலான சாலையில் நடத்தப்பட்ட இந்த போட்டியை பயன்படுத்தி 3 கணவன்மார்கள் தங்கள் நீண்ட நாள் ஆசையை நிறைவேற்றிக் கொண்டதாக கமெண்ட் அடித்தாலும், விழுந்தவர்களுக்கு தான் வலி தெரியும் என்கின்றனர் போட்டி நடத்துவோர். பின்னர் போட்டியை காண வந்த கிராமவாசிகள் குதூகலமாக கொண்டாடப்பட்டு, வெளிநாடுகளில் நடக்கும் இந்த போட்டி நம்ம ஊரிலும் நடந்துருக்கு என்று கருத்து கூறி மகிழ்ச்சியடைந்தனர்.

 

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

பூனையை பார்த்துக்கோங்க என்னோட சொத்து உங்களுக்கு…ஆஃபர் கொடுத்த சீனா தாத்தா!

குவாங்டாங் : சீனாவின் குவாங்டாங் மாகாணத்தைச் சேர்ந்த 82 வயது முதியவர் லாங், தான் இறந்த பிறகு தனது அன்பு…

28 minutes ago

அங்கன்வாடி மையங்கள் மூடலா? விளக்கம் கொடுத்த அமைச்சர் கீதா ஜீவன்!

சென்னை : தமிழ்நாடு முழுவதும் 501 அங்கன்வாடி மையங்கள் மூடப்பட்டதாக சமீபத்தில் தகவல் வெளியாகி அந்த செய்தி தீயை போல மிகவும்…

1 hour ago

ஜாமீன் கேட்ட ஸ்ரீகாந்த், கிருஷ்ணா…நாளை தீர்ப்பு சொல்லும் சென்னை உயர்நீதிமன்றம்!

சென்னை: தமிழ் திரைப்பட நடிகர்களான ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணா, போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து அவர்கள் தாக்கல் செய்த…

2 hours ago

எலான் மஸ்க் கட்சி தொடங்கியது முட்டாள்தனமானது…டொனால்ட் டிரம்ப் விமர்சனம்!

வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், எலான் மஸ்க் புதிதாக தொடங்கிய ‘அமெரிக்கா கட்சி’ (America Party) குறித்து…

2 hours ago

ஸ்கெட்ச் போட்ட AI..ஒரே மாதத்தில் ரூ.10 லட்சம் கடனை அடைத்த அமெரிக்க பெண்!

டெலவேர்  : அமெரிக்காவின் டெலவேர் மாகாணத்தைச் சேர்ந்த 35 வயது ஜெனிபர் ஆலன், ChatGPT-யின் வழிகாட்டுதலுடன் ஒரே மாதத்தில் ரூ.10…

3 hours ago

உங்க கொள்கைக்கும் எங்க கொள்கைக்கும் ரொம்ப தூரம்”… த.வெ.க குறித்த கேள்விக்கு சீமான் பதில்!

சென்னை : 2026 தேர்தலில் முதல்வர் வேட்பாளர் விஜய் என்று தவெக சமீபத்தில் அறிவித்திருந்தது. எனவே, இது குறித்து அரசியல்…

3 hours ago