“நான்தான் காங்கிரஸ் வேட்பாளர்”- விருத்தாச்சலம் தொகுதியில் மனுதாக்கல் செய்தவரால் பரபரப்பு!

Published by
Surya

விருத்தாசலம் தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் எனக்கூறி நீதிராஜன் என்பவர் மனுதாக்கல் செய்ததால் தமிழக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டது.

தமிழக சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில் அரசியல் கட்சியினர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிவித்து வருகின்றனர். அந்தவகையில் திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சிக்கு 25 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் 21 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை மட்டுமே அறிவித்திருந்த நிலையில், தற்பொழுது எஞ்சிய 4 தொகுதிகளுக்கும் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், தங்களின் வேட்புமனுக்களை தாக்கல் செய்து வருகின்றனர். அந்தவகையில், காங்கிரஸ் சார்பில் விருத்தாச்சலம் தொகுதியின் வேட்பாளராக ராதாகிருஷ்ணனை அறிவித்தது. அவர் இன்னும் வேட்புமனு தாக்கல் செய்யாத நிலையில், நான்தான் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் எனக்கூறி அக்கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் நீதிராஜன் என்பவர், காங்கிரஸ் கொடியுடன் திரளான தொண்டர்களுடன் ஊர்வலமாக வந்து மனு தாக்கல் செய்துள்ளார்.

காங்கிரஸ் கட்சி, தனது அதிகாரப்பூர்வமான வேட்பாளரான ராதாகிருஷ்ணனை அறிவித்ததை தொடர்ந்து, தற்பொழுது நீதிராஜன் மனு தாக்கல் செய்துள்ளது, பரபரப்பு ஏற்படுத்தியது. மேலும், அத்தொகுதியில் யார் வேட்பாளர் என்ற குழப்பம் நிலவியது. இதுகுறித்து அவர் கூறியதாவது, இந்த தொகுதியை சார்பற்றவர், இந்த தொகுதியை ராதாகிருஷ்ணனுக்கு கொடுத்தாலும் வீணாகிவிடும், தோல்வியடைந்துவிடுவார் என தெரிவித்துள்ளார்.

Published by
Surya

Recent Posts

“கச்சத்தீவை தாரை வார்த்து கொடுத்தது திமுக, மீனவர்கள் மீது அக்கறையில்லை” – இபிஎஸ் விமர்சனம்!

“கச்சத்தீவை தாரை வார்த்து கொடுத்தது திமுக, மீனவர்கள் மீது அக்கறையில்லை” – இபிஎஸ் விமர்சனம்!

சென்னை : மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடத்தில் பரப்புரை மேற்கொண்ட அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமிக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு…

4 hours ago

“நடந்து முடிந்த குரூப் – 4 தேர்வை ரத்து செய்துவிட்டு, மறு தேர்வு நடத்த வேண்டும்” – தவெக பொதுச்செயலாளர்.!

சென்னை : தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்திய குரூப்-4 தேர்வை ரத்து செய்து மறுதேர்வு நடத்த வேண்டும் என்று…

5 hours ago

பீகாரில் ஆகஸ்ட் 1 முதல் இலவச மின்சாரம் – நிதிஷ்குமார் அறிவிப்பு.!

பீகார் : இந்த ஆண்டு பீகாரில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில், தேர்தலுக்கு முன்னதாக நிதிஷ் அரசு…

6 hours ago

எரிபொருள் சப்ளை ஸ்விட்சுகளை கேப்டன் ஆஃப் செய்தாரா? – இந்திய விமானிகள் சங்கம் கண்டனம்.!

டெல்லி : கடந்த மாதம் அகமதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானது. அது போயிங் 787 ட்ரீம்லைனர் விமானம். அதில்…

6 hours ago

ரயிலில் ரூ.4 கோடி பிடிபட்ட விவகாரம்: பாஜகவினர் பணப்பட்டுவாடா செய்தது உறுதி – சிபிசிஐடி.!

நெல்லை : 2024 மக்களவைத் தேர்தலுக்கு முன்பு தாம்பரம் ரயில் நிலையத்தில் ரூ.4 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில்,…

7 hours ago

‘ஹாரி பாட்டர்’ நடிகைக்கு வாகனம் ஓட்ட இடைக்கால தடை.! ஏன் தெரியுமா.?

லண்டன் : 'ஹாரி பாட்டர்' படத் தொடரில் ஹெர்மியோன் கிரேன்ஜர் வேடத்தில் நடித்து பிரபலமான ஹாலிவுட் நடிகை எம்மா வாட்சன்…

7 hours ago