சீமானை விட அதிக வாக்குகள் வாங்குவேன்.. சவாலுக்கு தயார் – அண்ணாமலை

Published by
பாலா கலியமூர்த்தி

கோவையில் இன்று செய்தியாளர் சந்திப்பில் பேசிய தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, ஒரே நாடு, ஒரே தேர்தல் என்ற கொள்கை முடிவை பாஜக முழுமையாக வரவேற்கிறது. நாடாளுமன்றம், சட்டமன்றம் என ஒரே நேரத்தில் அனைத்து தேர்தலும் நடத்த வேண்டும். ஒரே நாடு ஒரே தேர்தல் முறை பல நாடுகளில் அமலில் இருக்கிறது. இந்தோனேசியா, பெலிஜியம், தென் ஆப்பிரிக்கா உள்பட பல நாடுகளில் இருக்கிறது.

எனவே, ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பதை பாஜக முழுமையாக வரவேற்கிறது. தேர்தல்கள் மாறி மாறி வருவதால் பல்வேறு பிரச்சினைகள் வருகிறது. ஒரே நேரத்தில் அனைத்து தேர்தலும் நடந்தால், தேர்தல் செலவு குறையும். இந்தியாவின் வளர்ச்சி அதிகப்படும். அதிகாரிகளுக்கு சுமை குறையும் என்றார். இதனைத்தொடர்ந்து சீமான் பேசியது தொடர்பாக அண்ணாமலையிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளித்த அவர், சீமானை விட 1% அல்ல, 30% வாக்குகளை வாங்கி காட்டுவேன். சவாலுக்கு தயார் என்றார். நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை யாரும் சேர்த்து கொள்ளாததால் தேர்தலில் தனியாக நிற்கிறார்கள். எனவே, நாம் தமிழர் கட்சியை விட 30% அதிகமான வாக்குகளை பாஜக பெறும். நாம் தமிழர் கட்சி 2024க்கு பின்னர் இருக்காது. வெறுப்பை விதைத்து கட்சி நடத்த முடியாது என தெரிவித்தார்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

வங்கக் கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி….நாளை இந்த மாவட்டங்களில் மழைக்கு வைப்பு!

சென்னை : வங்கக் கடலின் வடக்குப் பகுதியில் நிலவிய குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக…

3 hours ago

துரோக கூட்டணியை வீழ்த்துவோம்! துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!

சென்னை :  மாவட்டத்தில் இன்று நடைபெற்ற பாக முகவர்கள் கூட்டத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு பல…

3 hours ago

‘மாரீசன்’ படம் எப்படி இருக்கு? டிவிட்டர் விமர்சனம் இதோ!

சென்னை : எப்போதும் வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து நடித்து வரும் பஹத் பாசில் தமிழில் இந்த முறை வடிவேலுடன்…

4 hours ago

“பரிபூரண உடல்நலம் பெற்றிட…”முதல்வர் ஸ்டாலின் நலம் பெற விஜய் வாழ்த்து!

சென்னை :  முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த ஜூலை 21-ஆம் தேதி லேசான தலைசுற்றல் காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள…

5 hours ago

என்னைக்கும் விடாமுயற்சி..கால் உடைந்தும் களத்தில் இறங்கிய ரிஷப் பண்ட்!

மான்செஸ்டர் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெறும் நான்காவது டெஸ்ட் போட்டியின் முதல் நாளில் கால் விரலில்…

6 hours ago

இந்தியா-பிரிட்டன் இடையே வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்து…பிரதமர் மோடி பெருமிதம்!!

லண்டன் : இந்தியாவுக்கும் பிரிட்டனுக்கும் இடையே முக்கிய வர்த்தக ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. இந்த ஒப்பந்தங்கள் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி…

6 hours ago