BJP Annamalai India [Image-dtnext]
கோவையில் இன்று செய்தியாளர் சந்திப்பில் பேசிய தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, ஒரே நாடு, ஒரே தேர்தல் என்ற கொள்கை முடிவை பாஜக முழுமையாக வரவேற்கிறது. நாடாளுமன்றம், சட்டமன்றம் என ஒரே நேரத்தில் அனைத்து தேர்தலும் நடத்த வேண்டும். ஒரே நாடு ஒரே தேர்தல் முறை பல நாடுகளில் அமலில் இருக்கிறது. இந்தோனேசியா, பெலிஜியம், தென் ஆப்பிரிக்கா உள்பட பல நாடுகளில் இருக்கிறது.
எனவே, ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பதை பாஜக முழுமையாக வரவேற்கிறது. தேர்தல்கள் மாறி மாறி வருவதால் பல்வேறு பிரச்சினைகள் வருகிறது. ஒரே நேரத்தில் அனைத்து தேர்தலும் நடந்தால், தேர்தல் செலவு குறையும். இந்தியாவின் வளர்ச்சி அதிகப்படும். அதிகாரிகளுக்கு சுமை குறையும் என்றார். இதனைத்தொடர்ந்து சீமான் பேசியது தொடர்பாக அண்ணாமலையிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதிலளித்த அவர், சீமானை விட 1% அல்ல, 30% வாக்குகளை வாங்கி காட்டுவேன். சவாலுக்கு தயார் என்றார். நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை யாரும் சேர்த்து கொள்ளாததால் தேர்தலில் தனியாக நிற்கிறார்கள். எனவே, நாம் தமிழர் கட்சியை விட 30% அதிகமான வாக்குகளை பாஜக பெறும். நாம் தமிழர் கட்சி 2024க்கு பின்னர் இருக்காது. வெறுப்பை விதைத்து கட்சி நடத்த முடியாது என தெரிவித்தார்.
தூத்துக்குடி : 2 நாள் பயணமாக பிரதமர் மோடி இன்று தமிழகம் வருகிறார். தற்போது மாலத்தீவில் உள்ள பிரதமர் அங்கிருந்து…
சென்னை : அன்புமணியின் நடைப்பயணத்துக்கு தடை விதித்து டிஜிபி உத்தரவிட்ட நிலையில், அனுமதி கோரி இன்று சென்னை உயர் நீதிமன்றத்தை…
தூத்துக்குடி : பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஜூலை 26, 2025) தமிழ்நாட்டிற்கு இரண்டு நாள் பயணமாக வருகிறார். தற்போது…
சென்னை : நேற்று காலை வடக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, மாலை ஆழ்ந்த…
மான்செஸ்டர் : இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட், இங்கிலாந்துக்கு எதிரான மான்செஸ்டரில் நடைபெறும் நான்காவது டெஸ்ட்…
சென்னை : இன்ஸ்டாகிராம் பிரபலமான இலக்கியா, ஜூலை 24, 2025 அன்று சென்னையில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாகவும், இதற்கு தமிழ்…