BJP Annamalai India [Image-dtnext]
கோவையில் இன்று செய்தியாளர் சந்திப்பில் பேசிய தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, ஒரே நாடு, ஒரே தேர்தல் என்ற கொள்கை முடிவை பாஜக முழுமையாக வரவேற்கிறது. நாடாளுமன்றம், சட்டமன்றம் என ஒரே நேரத்தில் அனைத்து தேர்தலும் நடத்த வேண்டும். ஒரே நாடு ஒரே தேர்தல் முறை பல நாடுகளில் அமலில் இருக்கிறது. இந்தோனேசியா, பெலிஜியம், தென் ஆப்பிரிக்கா உள்பட பல நாடுகளில் இருக்கிறது.
எனவே, ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பதை பாஜக முழுமையாக வரவேற்கிறது. தேர்தல்கள் மாறி மாறி வருவதால் பல்வேறு பிரச்சினைகள் வருகிறது. ஒரே நேரத்தில் அனைத்து தேர்தலும் நடந்தால், தேர்தல் செலவு குறையும். இந்தியாவின் வளர்ச்சி அதிகப்படும். அதிகாரிகளுக்கு சுமை குறையும் என்றார். இதனைத்தொடர்ந்து சீமான் பேசியது தொடர்பாக அண்ணாமலையிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதிலளித்த அவர், சீமானை விட 1% அல்ல, 30% வாக்குகளை வாங்கி காட்டுவேன். சவாலுக்கு தயார் என்றார். நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை யாரும் சேர்த்து கொள்ளாததால் தேர்தலில் தனியாக நிற்கிறார்கள். எனவே, நாம் தமிழர் கட்சியை விட 30% அதிகமான வாக்குகளை பாஜக பெறும். நாம் தமிழர் கட்சி 2024க்கு பின்னர் இருக்காது. வெறுப்பை விதைத்து கட்சி நடத்த முடியாது என தெரிவித்தார்.
வாஷிங்டன் : அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், ஜூலை 23, 2025 அன்று வாஷிங்டனில் நடந்த செயற்கை நுண்ணறிவு (AI)…
சென்னை : வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் காரணமாக, சென்னை முதல் தூத்துக்குடி வரையிலான 9 துறைமுகங்களில் ஒன்றாம்…
சென்னை : நேற்று காலை வடக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, மாலை…
ராஜஸ்தான் : ராஜஸ்தான் மாநிலம் ஜலாவரின் மனோகர்தனா பகுதியில் உள்ள பிப்லோடி கிராமத்தில் உள்ள அரசுப் பள்ளியின் பாழடைந்த கட்டிடம்…
சென்னை : வருகின்ற 2026 தேர்தலுக்காக திமுகவுக்கு எதிராக 'உருட்டுகளும் திருட்டுகளும்' என்ற புதிய பிரசார உத்தியை அதிமுக பொதுச்செயலாளர்…
சென்னை : பாமக நிறுவனர் ராமதாஸ், இன்று தனது 87-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவரது பிறந்தநாளை முன்னிட்டு, டாக்டர்.ராமதாஸின் வாழ்க்கை…