TRB Raja [Image Source : Twitter/@chnharish]
டெல்டாவில் விவசாய தொழிற்பேட்டை அமைய வேண்டும் என்ற முதல்வரின் நீண்ட நாள் கனவு, அது நிச்சயமாக நிறைவேற்றப்படும் என டிஆர்.பி ராஜா பேட்டி.
திமுக நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர். பாலு மகன் டி.ஆர்.பி.ராஜா மன்னார்குடி தொகுதியில் இருந்து மூன்றாவது முறையாக சட்டப்பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில், இன்று அமைச்சராக பதவியேற்றுள்ளார்.
சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் நடைபெற்ற பதவியேற்பு நிகழ்ச்சியில், மன்னார்குடி தொகுதி எம்எல்ஏ டி.ஆர்.பி.ராஜா முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் புதிய அமைச்சராக பதவியேற்றார். டி.ஆர்.பி.ராஜாவுக்கு ஆளுநர் ஆர்என் ரவி பதவி பிரமாணம் மற்றும் ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார்.
அமைச்சராக பொறுப்பேற்றபின் தலைமைச்செயலகத்தில் டி.ஆர்.பி.ராஜா பேட்டி அளித்துள்ளார். அப்போது பேசிய அவர், எல்லாருக்கும் எல்லாம் என்கின்ற நோக்கத்துடன், தமிழ்நாட்டை தொடர்ந்து நம்பர் 1 மாநிலமாக அமைத்திட எல்லா விதத்திலும் சிறப்பாக ஆட்சி செய்து வருகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
அவர் பொறுப்பேற்றதிலிருந்து டெல்டாவில் எந்த பாதிப்பும் இல்லை; டெல்டாவில் விவசாய தொழிற்பேட்டை அமைய வேண்டும் என்பது முதலமைச்சரின் நீண்ட நாள் கனவு, அது நிச்சயமாக நிறைவேற்றப்படும்; முதலமைச்சர் வழிகாட்டுதலில் எந்தவொரு பணியாக இருந்தாலும் திறம்பட செயல்படுவேன் தெரிவித்துள்ளார்.
ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…
வாஷிங்டன் : அமெரிக்காவும் சீனாவும் கூட்டாக தங்கள் தற்போதைய வரிகளில் ஒரு பகுதியை 90 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளன.…
டெல்லி : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும் ‘தி…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான மோதலுக்குப் பிறகு, நாட்டின் பாதுகாப்பு நோக்கங்களுக்காக இஸ்ரோவின் 10 செயற்கைக்கோள்கள் தொடர்ந்து கண்காணித்து…