TRB Raja [Image Source : Twitter/@chnharish]
டெல்டாவில் விவசாய தொழிற்பேட்டை அமைய வேண்டும் என்ற முதல்வரின் நீண்ட நாள் கனவு, அது நிச்சயமாக நிறைவேற்றப்படும் என டிஆர்.பி ராஜா பேட்டி.
திமுக நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர். பாலு மகன் டி.ஆர்.பி.ராஜா மன்னார்குடி தொகுதியில் இருந்து மூன்றாவது முறையாக சட்டப்பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில், இன்று அமைச்சராக பதவியேற்றுள்ளார்.
சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் நடைபெற்ற பதவியேற்பு நிகழ்ச்சியில், மன்னார்குடி தொகுதி எம்எல்ஏ டி.ஆர்.பி.ராஜா முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் புதிய அமைச்சராக பதவியேற்றார். டி.ஆர்.பி.ராஜாவுக்கு ஆளுநர் ஆர்என் ரவி பதவி பிரமாணம் மற்றும் ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார்.
அமைச்சராக பொறுப்பேற்றபின் தலைமைச்செயலகத்தில் டி.ஆர்.பி.ராஜா பேட்டி அளித்துள்ளார். அப்போது பேசிய அவர், எல்லாருக்கும் எல்லாம் என்கின்ற நோக்கத்துடன், தமிழ்நாட்டை தொடர்ந்து நம்பர் 1 மாநிலமாக அமைத்திட எல்லா விதத்திலும் சிறப்பாக ஆட்சி செய்து வருகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
அவர் பொறுப்பேற்றதிலிருந்து டெல்டாவில் எந்த பாதிப்பும் இல்லை; டெல்டாவில் விவசாய தொழிற்பேட்டை அமைய வேண்டும் என்பது முதலமைச்சரின் நீண்ட நாள் கனவு, அது நிச்சயமாக நிறைவேற்றப்படும்; முதலமைச்சர் வழிகாட்டுதலில் எந்தவொரு பணியாக இருந்தாலும் திறம்பட செயல்படுவேன் தெரிவித்துள்ளார்.
குஜராத் : மாநிலம் அகமதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் (விமான எண் AI171) லண்டன் கேட்விக் விமான நிலையத்திற்கு புறப்பட்ட…
சென்னை : மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, ஏற்கனவே, கடந்த ஜூலை 2-ஆம் தேதி சென்னையில் அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.…
லண்டன் : இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் லார்ட்ஸ் மைதானத்தில் 5 விக்கெட்டுகள் வீழ்த்தி, கௌரவப் பலகையில் இடம்பெற்றதை பெருமையாகக்…
குஜராத் : மாநிலம் வதோதரா மாவட்டத்தில், மஹிசாகர் ஆற்றின் மீது அமைந்த 40 ஆண்டுகள் பழமையான கம்பீரா-முஜ்பூர் பாலம் 2025…
கேரளா : மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று கேரளாவில் பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்ள வருகை தந்திருக்கிறார். நிகழ்வுகளில்…
சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, 17-ஆம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை…