இந்த சோதனை முடியட்டும் நான் பேசுகிறேன்.. முழு ஒத்துழைப்பு தர தயார்.! அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்.!

Published by
பாலா கலியமூர்த்தி

தனது வீட்டில் நடைபெறும் அமலாக்கத்துறை சோதனை குறித்து அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டி. 

தமிழ்நாட்டில் சென்னை, கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். சென்னை பசுமை வழிச்சாலையில் அமைச்சரின் அரசு இல்லம், கரூரில் உள்ள அமைச்சரின் பூர்விக வீட்டிலும் அமலாக்கத்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜி சகோதரர் அசோக் வீட்டில் மத்திய படையினர் பாதுகாப்புடன் இன்று காலை முதல் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். வருமான வரித்துறை சோதனையின்போது பிரச்சனை ஏற்பட்ட நிலையில் மத்திய படை பாதுகாப்புடன் சோதனை நடைபெறுகிறது.

அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடைய இடங்களில் சமீபத்தில் வருமான வரித்துறை சோதனை நடந்த நிலையில், தற்போது அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அமைச்சரின் நண்பர், உறவினர்களின் வீடு, அலுவலகங்களில் 8 நாட்களாக வருமான வரித்துறை சோதனை நடைபெற்றது.

தற்போது சென்னை, கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகின்றனர். வருமான வரித்துறை சோதனையில் கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், சென்னையில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, அமலாக்கத்துறை சோதனை குறித்த தகவல் எனக்கு முன்கூட்டியே சொல்ல வேண்டிய அவசியமில்லை. சட்டபூர்வமாக சொல்லமாட்டார்கள். நான் நடைப்பயிற்சி மேற்கொள்ள சென்றுவிட்டேன், செல்லும் வழியில் தான் தகவல் வந்தது. இதனால், கூட வந்த நண்பர்களை அனுப்பிவிட்டு, வீட்டிற்கு திரும்ப வந்துவிட்டேன்.

என்ன நடக்கும் என்பதை பார்க்கலாம், வருமான வரித்துறை சோதனைக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்கப்பட்டது. தற்போது, அமலாக்கத்துறை சோதனைக்கும் முழு ஒத்துழைப்பு தர தயாராக இருக்கிறேன். எந்த ஆவணங்கள் குறித்து விளக்கம் கேட்டாலும் சொல்வதற்கு தயார் எனவும் தெரிவித்தார்.

என்ன நோக்கத்தில் அமலாக்கத்துறை வந்துள்ளது, என்ன தேடுகிறார்கள் என்பதை பார்ப்போம், இந்த சோதனை முடிந்தபின் விளக்கமாக பேசுகிறேன். மேலும், அமலாக்கத்துறையின் விசாரணைக்கு நேரில் ஆஜராக இருப்பதாகவும், சோதனை நடந்து வருகிறது, முடிவில் தான் எங்கு ஆஜராவது என தெரியவரும் எனவும் கூறினார்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

கில் மாதிரி விளையாட ஆசைப்படுகிறேன்…சாதனை படைத்த வைபவ் சூர்யவம்சி பேச்சு!

லீட்ஸ்: இந்திய கிரிக்கெட்டின் உருவாகி வரும் நட்சத்திரமான வைபவ் சூர்யவம்சி, இங்கிலாந்து அண்டர்-19 அணிக்கு எதிரான இளையோர் ஒருநாள் போட்டியில்…

8 hours ago

மஸ்கின் கட்சியில் இந்த மூன்று அமெரிக்கர்கள் இணைவார்கள்! ட்ரம்ப் ஆதரவாளர் லாரா லூமர் கணிப்பு!

வாஷிங்டன்: டொனால்ட் டிரம்பின் நெருங்கிய ஆதரவாளரும், மாகா இயக்கத்தின் முக்கிய பிரமுகருமான லாரா லூமர், எலான் மஸ்க் தொடங்கவுள்ள புதிய…

8 hours ago

மடப்புரம் அஜித் சகோதரர் நவீன் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதி! என்ன காரணம்?

சிவகங்கை : மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவில் காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார், நகை திருட்டு வழக்கில் விசாரணைக்காக…

9 hours ago

2 கோடி உறுப்பினர்களை சேர்க்க த.வெ.க மும்முரம்… ஆலோசனைக் கூட்டத்திற்கு அழைப்பு!

சென்னை: தமிழக வெற்றிக் கழகம் (தவெக), 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு 2 கோடி உறுப்பினர்களை சேர்க்கும் இலக்கை அடைய…

10 hours ago

சுப்மன் கில் பேட்டிங் பார்த்து சோர்ந்துட்டோம்! அரண்டு போன இங்கிலாந்து பயிற்சியாளர்!

பர்மிங்காம்: இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் (ஜூலை 2-6, 2025, எட்ஜ்பாஸ்டன்), இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில்…

12 hours ago

தூத்துக்குடி விமானத்தில் இயந்திர கோளாறு! அவசரமாக ஓடுபாதையில் நிறுத்தம்!

தூத்துக்குடி : சென்னை விமான நிலையத்தில் இருந்து தூத்துக்குடிக்கு ஜூலை 6, 2025 காலை 10:10 மணிக்கு புறப்பட இருந்த ஸ்பைஸ்ஜெட்…

13 hours ago