Minister Senthil balaji [Image source : Twitter/@Veera284]
தனது வீட்டில் நடைபெறும் அமலாக்கத்துறை சோதனை குறித்து அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டி.
தமிழ்நாட்டில் சென்னை, கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். சென்னை பசுமை வழிச்சாலையில் அமைச்சரின் அரசு இல்லம், கரூரில் உள்ள அமைச்சரின் பூர்விக வீட்டிலும் அமலாக்கத்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜி சகோதரர் அசோக் வீட்டில் மத்திய படையினர் பாதுகாப்புடன் இன்று காலை முதல் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். வருமான வரித்துறை சோதனையின்போது பிரச்சனை ஏற்பட்ட நிலையில் மத்திய படை பாதுகாப்புடன் சோதனை நடைபெறுகிறது.
அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடைய இடங்களில் சமீபத்தில் வருமான வரித்துறை சோதனை நடந்த நிலையில், தற்போது அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அமைச்சரின் நண்பர், உறவினர்களின் வீடு, அலுவலகங்களில் 8 நாட்களாக வருமான வரித்துறை சோதனை நடைபெற்றது.
தற்போது சென்னை, கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகின்றனர். வருமான வரித்துறை சோதனையில் கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், சென்னையில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, அமலாக்கத்துறை சோதனை குறித்த தகவல் எனக்கு முன்கூட்டியே சொல்ல வேண்டிய அவசியமில்லை. சட்டபூர்வமாக சொல்லமாட்டார்கள். நான் நடைப்பயிற்சி மேற்கொள்ள சென்றுவிட்டேன், செல்லும் வழியில் தான் தகவல் வந்தது. இதனால், கூட வந்த நண்பர்களை அனுப்பிவிட்டு, வீட்டிற்கு திரும்ப வந்துவிட்டேன்.
என்ன நடக்கும் என்பதை பார்க்கலாம், வருமான வரித்துறை சோதனைக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்கப்பட்டது. தற்போது, அமலாக்கத்துறை சோதனைக்கும் முழு ஒத்துழைப்பு தர தயாராக இருக்கிறேன். எந்த ஆவணங்கள் குறித்து விளக்கம் கேட்டாலும் சொல்வதற்கு தயார் எனவும் தெரிவித்தார்.
என்ன நோக்கத்தில் அமலாக்கத்துறை வந்துள்ளது, என்ன தேடுகிறார்கள் என்பதை பார்ப்போம், இந்த சோதனை முடிந்தபின் விளக்கமாக பேசுகிறேன். மேலும், அமலாக்கத்துறையின் விசாரணைக்கு நேரில் ஆஜராக இருப்பதாகவும், சோதனை நடந்து வருகிறது, முடிவில் தான் எங்கு ஆஜராவது என தெரியவரும் எனவும் கூறினார்.
ஈரோடு : மாவட்டம், சிவகிரி அருகே உள்ள விளக்கேத்தி உச்சிமேடு பகுதியில் நடந்த இரட்டைக் கொலை சம்பவம் பெரும் பரபரப்பை…
டெல்லி : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் மெல்ல மெல்ல இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், எந்த அணி கோப்பையை வெல்லப்போகிறது என்கிற எதிர்பார்ப்புகளும்…
சென்னை : அஇஅதிமுக முன்னாள் பொதுச்செயலாளர் வி.கே.சசிகலா நேற்று (மே 18, 2025) தஞ்சாவூரில் உள்ள முள்ளிவாய்க்கால் முற்றத்தில் நடைபெற்ற…
சென்னை : தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை விரைவில் தொடங்கவிருக்கும் நிலையில், அதற்கு முன்னேற்பாடாகவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் முதல்வர் மு.க.ஸ்டாலின்…
தமிழக மற்றும் அதனை ஒட்டிய வடக்கு கேரள பகுதிகளின் மேல் ஒருவளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக…
டெல்லி : அருண் ஜெய்ட்லி மைதானத்தில் நேற்று நடைபெற்ற போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் மோதியது.…