மாமியார் வீடான தமிழகத்தின் பெருமையை மெச்சும் வண்ணம் ஆந்திராவில் சிறப்பாக பணியாற்றுவேன் என ரோஜா பேட்டி.
ஆந்திர மாநில சுற்றுலா மற்றும் விளையாட்டு இளைஞர் நலன் துறை அமைச்சர் ரோஜா அவர்கள் இன்று காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்வதற்காக வந்தார். அப்போது அவருடன் பொதுமக்கள் சூழ்ந்து கொண்ட நிலையில், அவருடன் சேர்ந்து செல்ஃபி எடுத்துக் கொண்டனர்.
சாமி தரிசனத்திற்கு பின்பாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், ஆந்திராவில் தன்னை சுற்றுலா விளையாட்டு, கலாச்சாரத் துறை அமைச்சராக நியமித்து இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. மாமியார் வீடான தமிழகத்தில் உள்ள அனைத்து தரப்பு மக்களும் நான் அமைச்சராக வர வேண்டும் என்று வேண்டிக் கொண்டனர். இதனால் தமிழக மக்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
ஆண்டுதோறும் காமாட்சி அம்மனை வந்து தரிசனம் செய்வது வழக்கம். தனக்காக யார் யார் வேண்டிக்கொண்டார்களோ, அவர்களுக்கெல்லாம் மறுபடியும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். மாமியார் வீடான தமிழகத்தின் பெருமையை மெச்சும் வண்ணம் ஆந்திராவில் சிறப்பாக பணியாற்றுவேன் என தெரிவித்துள்ளார்.
சென்னை : பெட்ரோல் நிலையங்களில் உள்ள கழிப்பறைகள் பொது மக்களின் பயன்பாட்டிற்கு அல்ல, மாறாக பெட்ரோல் நிலைய ஊழியர்கள் மற்றும்…
லக்னோ : உத்தரப் பிரதேசத்தில் 2027 சட்டமன்றத் தேர்தலில் சமாஜ்வாதி கட்சி ஆட்சிக்கு வந்தால், ஏழைப் பெண்களுக்கு மாதம்தோறும் ரூ.3,000…
தெஹ்ரான் : இஸ்ரேல் - ஈரான் இரண்டுக்கும் இடையே 10-வது நாளாக போர் நடைபெற்று வருவது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.…
சென்னை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, மத்திய அரசின்…
சென்னை : தமிழக வெற்றிக் கழக (த.வெ.க) தலைவரும், தமிழ் திரையுலகின் முன்னணி நடிகருமான விஜய்யின் 51வது பிறந்தநாளை முன்னிட்டு, அவரது…
தெஹ்ரான் : இஸ்ரேலின் பென் குரியன் சர்வதேச விமான நிலையம் உட்பட பல முக்கிய இடங்களை குறிவைத்து ஈரான் தாக்குதல்…