தற்போதுள்ள இளைய தலைமுறையினர் மதுவுக்கு அடிமையாகி இருப்பதை தடுக்க டாஸ்மாக்கில் 21 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு மது கொடுக்கக்கூடாது என விதி உள்ளது. ஆனால் பல இடங்களில் 21 வயதிற்கு உட்பட்டவர்கள் மறைமுகமாக மது வாங்கி செல்கின்றனர்.
அதற்கேற்றார் போல் ஊழியர்களும் மதுவை கொடுத்து வருகின்றனர்.இதை தடுக்க நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன்படி இனி மது வாங்க வரும் நபர் 21 வயதிற்கு குறைவானவர் என்ற சந்தேகம் வந்தால் அவரிடம் அடையாள அட்டை , பாஸ்போர்ட், ஆதார் கார்டு, ஓட்டுனர் உரிமம் ஆகியவை சரிபார்க்கப்படும்.
சந்தேகப்படும் நபர் 21 வயது குறைவாக இருந்தால் அவருக்கும் மது கொடுக்கக் கூடாது . அதேபோல் அவரின் முகவரி , பெயர் உள்ளிட்ட விவரங்களை வாங்கிக் கொண்டு அவர்களுக்கு அறிவுரை வழங்கி வருகிறோம். இதற்காக ஒவ்வொரு டாஸ்மாக் கடையிலும் தனி நோட் பராமரிக்கப்பட்டு வருகிறது.
ஒவ்வொரு மண்டலத்திலும் உள்ள மாவட்ட மேலாளர்கள் இப்பணியை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். 21 வயதிற்கு குறைவாக உள்ள இளைஞர்களுக்கு மது கொடுக்கக்கூடாது என்று டாஸ்மாக் வேலைசெய்யும் ஊழியர்களுக்கும் அறிவுரை கொடுக்கப்பட்டுள்ளது.
அப்படி கொடுத்தால் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மதுக்கடையில் சிசிடி கேமரா பொருத்திய பின் முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டுவிடும் என அதிகாரிகள் கூறுகின்றனர்.
சென்னை : தமிழ்நாடு பொறியியல் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியல் இன்று (ஜூன் 27) வெளியிடப்பட்டது. கட் ஆஃப் மதிப்பெண், இட…
சென்னை : 2026 தேர்தலில் வென்று ஆட்சியமைத்தால், அதிமுகவில் இருந்து முதல்வர் வருவார் என்று அமித்ஷா கூறியது பேசுபொருளாகியுள்ளது. முதல்வராக…
சவூதி : உலகின் தலைசிறந்த கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ, சவுதி ப்ரோ லீக் அணியான அல் நசார் கால்பந்து…
சென்னை : 2026-ல்தமிழகத்தில் நிச்சயம் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும், அதில் பாஜகவும் அங்கம் வகிக்கும் என அமித்…
சென்னை : தமிழக வெற்றிக்கழகத்தின் மாநில செயற்குழு கூட்டம், அக்கட்சியின் தலைவர் விஜய் தலைமையில் வருகிற ஜூலை 4ம் தேதி…
லாஸ் ஏஞ்சல்ஸ் : 98வது அகாடமி விருதுகள் வழங்கும் விழா அடுத்த ஆண்டு மார்ச் 15ம் தேதி 6 அன்று…