தி கேரளா ஸ்டோரி படத்தை தடை செய்யவில்லை என்றால் திரையரங்குகளை முற்றுகையிடுவோம்.. சீமான் பேட்டி.!!

Published by
பால முருகன்

இயக்குனர் லதா சீனிவாசன் எழுதிய, இயக்குனர் சுதிப்தோ சென்னின் இயக்கிய இந்தி திரைப்படமான ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படம் கடும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. படத்தில் கேரள பெண்கள் ISIS தீவிரவாத அமைப்பில் சேர்க்கப்படுவதாக கட்டப்பட்டிருந்ததால் இதற்கு ஒரு தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இதனையடுத்து, படத்துதடை வெளியீட தடை விதிக்க நீதிமன்றம் நேற்று மறுத்ததை அடுத்து இன்று படம் வெளியாகவுள்ளது. இதனால் கலவரம் ஏதும் நடக்காமல் இருக்க படம்  கேரளா மற்றும் தமிழக திரையரங்குகளில் எங்கு எல்லாம் வெளியாகியுள்ளதோ அங்கு எல்லாம் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், படத்தை தடை செய்ய கூறி பலரும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் சென்னையில் இன்று நடந்த பேட்டியில் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர் ” கேரளா ஸ்டோரி படத்தை தமிழ்நாட்டில் அரசு தடை செய்ய வேண்டும். அப்படி தடை செய்யவில்லை என்றால் திரையரங்குகளை நாங்கள் முற்றுகையிடுவோம். பல முறை நங்கள் கோரிக்கை வைத்து அறிக்கை வெளியிட்டோம்.

தயவு செய்து மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து படத்தை நிறுத்துங்கள் என்று அப்படி இருந்து திரும்ப திரும்ப அந்த வேலையை செய்தால் என்ன அர்த்தம்..? இந்த படம் தேவையற்றது. இந்த படத்திற்கு திரையரங்கு வாசலில் போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. நாங்கள் முற்றுகையிட்டு  போராட்டம் நடத்தினால் நீங்கள் என்ன செய்வீர்கள்..?  நான் சட்டம் ஒழுங்கை கெடுக்கிறேன் என்று சொல்வீர்கள்.

எனவே எதற்காக இந்த படத்திற்கு காவல்துறை பாதுகாப்பு கொடுக்கிறீர்கள்..?  எதற்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டுமோ அங்கு கொடுங்கள். தமிழக அரசு கேரளா ஸ்டோரி படத்தை தமிழ்நாட்டில்  தடை செய்யவேண்டும்” என கூறியுள்ளார்.

Published by
பால முருகன்

Recent Posts

இயக்குநர் பா.ரஞ்சித் படப்பிடிப்பில் ஸ்டண்ட் மாஸ்டர் மோகன்ராஜ் உயிரிழப்பு.!

சென்னை : இயக்குநர் பா.ரஞ்சித்தின் 'வேட்டுவம்' பட ஷூட்டிங்கில் சண்டை பயிற்சியாளர் மோகன்ராஜ் (52) மாரடைப்பால் உயிரிழந்தார். காஞ்சிபுரத்தைச் சேர்ந்த…

4 minutes ago

வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு!

சென்னை : வடமேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய மேற்கு வங்கம், வடக்கு ஒடிசா கடற்கரை பகுதியில் வளிமண்டல…

50 minutes ago

புதுச்சேரியைச் சேர்ந்த மாடல் அழகி சான் ரேச்சல் தற்கொலை.! நடந்தது என்ன.?

உருளையன்பேட்டை : புதுச்சேரியைச் சேர்ந்த மாடல் அழகி சான் ரேச்சல் (25) தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை…

1 hour ago

பாலியல் வன்கொடுமை.., பொதுவெளியில் தண்டனை அளித்த ஈரான் அரசு.!

புக்கான் : ஈரானில் இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து கொன்றவருக்கு பொதுவெளியில் மரண தண்டனையை நிறைவேற்றிய அந்நாட்டு அரசு. இந்த வழக்கு…

2 hours ago

திருவள்ளூர் ரயில் தீ விபத்து.., தீயை முழுமையாக அணைத்தும், மீண்டும் தீ.!

சென்னை : திருவள்ளூர் அருகே ஏகாட்டூரில் இன்று அதிகாலை 5:20 மணியளவில் சென்னை துறைமுகத்தில் இருந்து ஜோலார்பேட்டைக்கு எரிபொருள் (டீசல்)…

2 hours ago

ஜூலை 15, 16, 17ம் தேதிகளில் கனமழை வெளுக்கும்.! எந்தெந்த மாவட்டங்களில்?

சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்றும், நாளையும் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும்…

4 hours ago