Sellur K Raju (File photo | EPS)
ஓபிஎஸ் உள்ளிட்ட 4 பேரின் மேல்முறையீட்டு மனுக்களை தள்ளுபடி செய்து அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் செல்லும் என்று சென்னை உயரதிமன்றம் வழங்கிய தீர்ப்பை வரவேற்று மதுரை கோரிப்பாளையத்தில் அதிமுக அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ இனிப்புகள் வழங்கி கொண்டாடினார். இதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய செல்லூர் ராஜூ, உயர்நீதிமன்றம் தீர்ப்பு வரவேற்கத்தக்கது. மதுரை மண்ணை மிதித்தாலே வெற்றிதான், இனி அனைத்து தேர்தல்களிலும் அதிமுக வெற்றி பெறும்.
மதுரையில் நடந்த அதிமுக மாநாட்டுக்கு கூடிய கூட்டத்தை, இதுவரை என் வாழ்க்கையில் பார்த்தது இல்லை, இது தானா சேர்ந்த கூட்டம். மதுரை அதிமுக மாநாட்டுக்கு எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவுக்கு கூடாத கூட்டம் கூடியுள்ளது. அதிமுகவுக்கு கிடைத்த இதயக்கனி எடப்பாடி பழனிச்சாமி என்று கூறினார். திமுக குறித்து பேசுகையில், ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வு ரத்து செய்ய முதல் கையெழுத்து போடுவோம் என்றார்கள், இப்போது என்ன செய்து விட்டார்கள்? நீட் தேர்வு ரத்து செய்யமுடியாது என தெரிந்திருந்தும் திமுக நாடகம் ஆடுகிறது.
நீட் தேர்வுக்கு எதிராக நாங்கள் சட்டமன்றத்திலேயே தீர்மானம் நிறைவேற்றி அனுப்பி இருக்கிறோம். அரைத்த மாவை அரைத்து மக்களை ஏமாற்றுபவர்கள் நாங்கள் அல்ல என்று கூறினார். மதுவால் தமிழகம் சீரழிந்து வருகிறது, கட்டதுரைக்கு கட்டம் சரியில்லை என்பது போல திமுகவுக்கு கட்டம் சரியில்லை. எங்கே போனாலும் அவர்களுக்கு இடிக்கிறது எனவும் விமர்சித்துள்ளார். மேலும், நடிகர் ரஜினிகாந்த் நடக்கும்போது, காலில் சரக் சரக் என தீ பரவுவது போல மதுரையில் சமீபத்தில் நடைபெற்ற அதிமுக மாநாட்டில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மைக்கில் பேசுகையில், கணீர் கணீர் என பேசி பின்னி எடுத்துவிட்டார் எனவும் கூறினார்.
சிவகங்கை : சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார் (வயது 27),…
விருதுநகர்: சிவகாசி அருகே சின்னகாமன்பட்டியில் உள்ள பட்டாசு ஆலை வெடி விபத்தில் நேற்று 8 பேர் உயிரிழந்த நிலையில், படுகாயம்…
சென்னை : தமிழ்நாடு சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி (ADGP) டேவிட்சன் தேவாசீர்வாதம், காவல்துறை அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டத்தில் பல…
சென்னை : தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) குரூப் 4 தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை வெளியிட்டது. தேர்வர்கள் தங்களது…
சிவகங்கை : திருப்புவனத்தில் போலீசாரால் அடித்து கொலை செய்யப்பட்ட திருப்புவனம் இளைஞர் அஜித் குமார் வழக்கில் பெரும் திருப்பம் ஏற்பட்டுள்ளது.…
வாஷிங்டன் : ரஷ்யாவுடன் வர்த்தகம் மேற்கொள்ளும் இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளுக்கு, 500 சதவிகிதம் வரி விதிக்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.…