Kovai : கோவையில் பயங்கரம்.. நீதிமன்றத்தில் ஆஜராகிவிட்டு வெளியே வந்தவர்களுக்கு அரிவாள் வெட்டு.!

Published by
மணிகண்டன்

கோவையில் நீதிமன்றத்தில் ஆஜராகிவிட்டு வெளியே வந்த நபர்களை ஒரு கும்பல் அரிவாளால் வெட்டிய சம்பவம் அங்கு பெரும் பதற்றத்தை உண்டாக்கியுள்ளது. கோவை ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் ரஞ்சித் , சைமன், ரித்தீஷ் ஆகிய 3 பெரும் ஒரு குற்றவழக்கில் சாட்சியம் அளிக்க வந்துள்ளனர்.

அவர்கள் நீதிமன்றத்தில் சாட்சியம் அளித்துவிட்டு திரும்பி செல்கையில், அவர்கள் சொந்த ஊரான ரத்னபுரி நோக்கி சென்று கொண்டு இருக்கையில், கோவை ராம் நகர் அருகே, இரண்டு இரு சக்கர வாகனத்தில் வந்த 6 பேர் கொண்ட கும்பல்  அந்த 3 பேர் சென்ற வாகனத்தின் மீது மோதியது.

இதனை அடுத்து நிலை தடுமாறி விழுந்த 3 பேரையும் 6 பேர் கொண்ட கும்பல் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்கியுள்ளது. இதில் ஒரு நபர் அங்கிருந்து தப்பியோடிய நிலையில் ரஞ்சித், ரித்தீஷ் ஆகியோர் மீது அந்த கும்பல் தாக்குதல் நடத்தியது.

இந்த தாக்குதலில் இருந்து அதிர்ஷ்டவசமாக அந்த இருவரும் அரிவாள் வெட்டு காயங்களுடன் தப்பியோடிவிட்டனர். அவர்கள் இருவரும் தற்போது கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நீதிமன்றத்தில்  சாட்சியம் அளிக்க ரஞ்சித் , சைமன், ரித்தீஷ் ஆகியோர் மீது ஏற்கனவே குற்ற வழக்குகளும் பதியப்பட்டு இருந்துள்ளதால், எந்த வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் இந்த கொலை முயற்சி தாக்குதலை நடத்தினார்கள் என போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Published by
மணிகண்டன்

Recent Posts

தங்கக் கடத்தல் வழக்கு: நடிகை ரன்யா ராவின் ரூ.34 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கம்.!

டெல்லி : தங்கக் கடத்தல் மற்றும் பணமோசடி வழக்கு தொடர்பாக கன்னட நடிகை ரன்யா ராவுக்குச் சொந்தமான ரூ.34.12 கோடி…

2 hours ago

இந்திய பவுலர்களுக்கு சவாலாக மாறிய இங்கிலாந்து பார்ட்னர்ஷிப்.! சதம் விளாசிய ஸ்மித் – ஹாரி புரூக்.!

பர்மிங்காம் : இந்திய அணிக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்று வருகிறது. ஷுப்மான் கில்லின் இரட்டை சதத்தால்…

2 hours ago

மறுக்கூட்டலில் இன்ப அதிர்ச்சி..,10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று பொள்ளாச்சி மாணவன் அசத்தல்.!

பொள்ளாச்சி : பொள்ளாச்சியைச் சேர்ந்த குருதீப் என்ற 10ஆம் வகுப்பு மாணவர், தனியார் பள்ளியில் பயின்று வந்த நிலையில், 2025ஆம்…

4 hours ago

தமிழக வாழ்வுரிமை கட்சி நிர்வாகி மணிமாறன் வெட்டிக் கொலை.!

காரைக்கால் : மயிலாடுதுறை அருகே தமிழக வாழ்வுரிமை கட்சியின் காரைக்கால் மாவட்ட நிர்வாகி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை…

4 hours ago

5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து.., ஹாரி புரூக் அரைசதம் – ஸ்மீத் அதிரடி சதம்.!

பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் இந்திய அணி 587 ரன்களை குவித்துள்ளது. இந்திய அணிக்கு தூணாக நின்று…

5 hours ago

“காவல்துறைக்கு நிறைய வேலைகள் உள்ளன, உங்களுக்கு ஏன் அவசரம்?” – தவெகவுக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்.!

சென்னை : திருப்புவனம் இளைஞர் மரணத்தை கண்டித்து நாளை (ஜூலை 3, 2025) எழும்பூர், ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற இருந்த…

5 hours ago