TNEB Electricity Bill [File Image]
அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிப்போர் பொது பயன்பாடாக பயன்படுத்தும் மோட்டார், மின்விளக்குகள் போன்ற மின் சாதனங்களுக்கு மின் கட்டணமாக ஒரு யூனிட்டிற்கு 8 ரூபாய் 15 பைசா செலுத்த வேண்டி இருந்தது. இந்த நடைமுறையை கடந்த செப்டம்பர் மாதம் 18ஆம் தேதி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மாற்றியமைத்து உத்தரவிட்டார்.
அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், மின்தூக்கி இல்லாத மூன்று மாடிக்கும் குறைவாக உள்ள அடுக்குமாடி குடியிருப்புகள், 10 வீடுகளுக்கும் குறைவாக உள்ள அடுக்குமாடி குடியிருப்புகள் ஆகியவைகளுக்கு பொது பயன்பாட்டு மின் கட்டணமானது 8 ரூபாய் 15 பைசாவிலிருந்து 5 ரூபாய் 50 பைசாவாக குறைக்கப்படும் என்று அறிவித்தார்.
7,108 கோடி ரூபாய் முதலீடு.. 22,000 வேலைவாய்ப்புகள்… அமைச்சரவை கூட்டத்தில் முக்கிய முடிவுகள்.!
முதல்வரின் அறிவிப்பை தொடர்ந்து, நேற்று தமிழக மின்சாரத் துறை இது தொடர்பான அறிவிப்பாணையை வெளியிட்டது. அதில், தமிழக அரசின் கொள்கை வழிகாட்டுதலின்படி தமிழக மின்சார ஒழுங்குமுறை ஆணையம் புதிய குறைக்கப்பட்ட மின் கட்டணமாக, பத்து வீடுகள் அல்லது அதற்கு குறைவாக உள்ள அடுக்குமாடி குடியிருப்புகள், மூன்று மாடிகள் அல்லது அதற்கு குறைவாக உள்ள மின் தூக்கி வசதி இல்லாத அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு புதிய தாழ்வழுத்த மின் கட்டண வகை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
பொது பயன்பாட்டு மின் கட்டணம் ஒரு யூனிட்டு 5 ரூபாய் 50 பைசா வசூலிக்கப்படும் என்றும் இந்த நடைமுறையானது இன்று முதல் (நவம்பர் 1) அமலுக்கு வரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இன்று முதல் மேற்கண்ட விதிமுறைகளுக்கு உட்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகளின் பொது விநியோகம் பயன்பாட்டில் பயன்படுத்தப்படும் மின்சார கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது.
டெல்லி : தங்கக் கடத்தல் மற்றும் பணமோசடி வழக்கு தொடர்பாக கன்னட நடிகை ரன்யா ராவுக்குச் சொந்தமான ரூ.34.12 கோடி…
பர்மிங்காம் : இந்திய அணிக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்று வருகிறது. ஷுப்மான் கில்லின் இரட்டை சதத்தால்…
பொள்ளாச்சி : பொள்ளாச்சியைச் சேர்ந்த குருதீப் என்ற 10ஆம் வகுப்பு மாணவர், தனியார் பள்ளியில் பயின்று வந்த நிலையில், 2025ஆம்…
காரைக்கால் : மயிலாடுதுறை அருகே தமிழக வாழ்வுரிமை கட்சியின் காரைக்கால் மாவட்ட நிர்வாகி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை…
பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் இந்திய அணி 587 ரன்களை குவித்துள்ளது. இந்திய அணிக்கு தூணாக நின்று…
சென்னை : திருப்புவனம் இளைஞர் மரணத்தை கண்டித்து நாளை (ஜூலை 3, 2025) எழும்பூர், ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற இருந்த…