ஒகேனக்கல் காவிரியாற்றில் வினாடிக்கு 70 கன அடியாக நீர்வரத்து அதிகரித்துள்ளது.
கேரளா கர்நாடகா ஆகிய மாநிலங்களில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருவதால் கர்நாடக மாநிலத்தில் உள்ள அணைகளுக்கு வரக்கூடிய நீர்வரத்து அதிகரித்துள்ளது. எனவே கடந்த மாதத்தில் பெய்த கனமழையால் கர்நாடக மாநிலத்தில் உள்ள அணைகள் முழுமையாக நிரம்பி இருந்தன. அப்பொழுது முதல் உபரிநீர் திறந்து விடப்பட்டு தமிழகத்தை நோக்கி காவிரி ஆற்றில் இன்று வரையிலும் பாய்ந்து வருகிறது.
இந்நிலையில் இன்று காலை நிலவரப்படி தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வினாடிக்கு 20 ஆயிரம் கன அடி நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் இரு கரைகளையும் தொட்டபடி வெள்ளம் ஓடிக் கொண்டே இருக்கிறது. எனவே ஒகேனக்கல் அருவிகள் மற்றும் தொங்கு பாலம் பகுதிகளுக்கு செல்ல கூடிய நடைபாதை வெள்ளத்தில் முழுமையாக மூழ்கி உள்ளது, அதிக நீர் வரத்தால் மீனவர்கள் மற்றும் பரிசல் ஓட்டுபவர்கள் ஆகியோருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளில் வசிப்பவர்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறும் தண்டோரா மூலம் அதிகாரிகளால் அறிவிக்கப்பட்டுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் காவிரி கரையோரத்தில், வருவாய்த்துறையினர் வனத்துறையினர் காவல்துறை, தீயணைப்புத்துறை ஆகியோர் தொடர்ந்து கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
லீட்ஸ்: இந்திய கிரிக்கெட்டின் உருவாகி வரும் நட்சத்திரமான வைபவ் சூர்யவம்சி, இங்கிலாந்து அண்டர்-19 அணிக்கு எதிரான இளையோர் ஒருநாள் போட்டியில்…
வாஷிங்டன்: டொனால்ட் டிரம்பின் நெருங்கிய ஆதரவாளரும், மாகா இயக்கத்தின் முக்கிய பிரமுகருமான லாரா லூமர், எலான் மஸ்க் தொடங்கவுள்ள புதிய…
சிவகங்கை : மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவில் காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார், நகை திருட்டு வழக்கில் விசாரணைக்காக…
சென்னை: தமிழக வெற்றிக் கழகம் (தவெக), 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு 2 கோடி உறுப்பினர்களை சேர்க்கும் இலக்கை அடைய…
பர்மிங்காம்: இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் (ஜூலை 2-6, 2025, எட்ஜ்பாஸ்டன்), இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில்…
தூத்துக்குடி : சென்னை விமான நிலையத்தில் இருந்து தூத்துக்குடிக்கு ஜூலை 6, 2025 காலை 10:10 மணிக்கு புறப்பட இருந்த ஸ்பைஸ்ஜெட்…