சன் டிவி நிறுவனம் கொரோனா இரண்டாவது அலையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நல உதவி வழங்க ரூ 30 கோடியை நிதி உதவியாக வழங்கியுள்ளது.
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை கட்டுக்கடங்காமல் காட்டு தீ போல் பரவி வருகிறது. இந்த வைரஸை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் தீவிரமாக செயல்பட்டு வருகின்ற நிலையில், உலக நாடுகள் இந்தியாவிற்கு பலவிதங்களில் ஆதரவுக்கரம் நீட்டி வருகிறது.
ஒவ்வொரு மாநிலங்களிலும், தொற்றால் பாதிக்கப்படுபவர்களுக்கு சிகிச்சையளிக்க, மருத்துவ உபகரணங்கள், ஆக்சிஜன், படுக்கைகள் போன்ற தேவைகள் அதிகரித்துள்ளது. இதனையடுத்து, மக்களுக்கு ,உதவும் வகையில், தனிநபர்களும், பிரபலமான நிறுவனங்களும் கூட உதவி செய்து வருகின்றன. அந்த வகையில் சன் டிவி நிறுவனம் கொரோனா இரண்டாவது அலையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நல உதவி வழங்க ரூ 30 கோடியை நிதி உதவியாக வழங்கியுள்ளது.
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தி அறிக்கையில், ‘இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் நடந்துவரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு இந்த பணம் செலவிட உதவியாக இருக்கும். இந்திய அரசும், மாநில அரசுகளும் ஆரம்பித்திருக்கும் பல்வேறு நலத்திட்ட உதவிகளுக்கும், ஆக்சிஜன் சிலிண்டர்கள், மருந்துகள் உள்ளிட்ட விஷயங்களை தரும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கும் சேர்த்து இந்த பணம் செலவிடப்படும். இது தவிர எங்கள் ஊடகங்கள் இந்திய மற்றும் உலகம் முழுவதும் இருக்கும் பார்வையாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும்.’ என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
சவூதி : உலகின் தலைசிறந்த கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ, சவுதி ப்ரோ லீக் அணியான அல் நசார் கால்பந்து…
சென்னை : 2026-ல்தமிழகத்தில் நிச்சயம் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும், அதில் பாஜகவும் அங்கம் வகிக்கும் என அமித்…
சென்னை : தமிழக வெற்றிக்கழகத்தின் மாநில செயற்குழு கூட்டம், அக்கட்சியின் தலைவர் விஜய் தலைமையில் வருகிற ஜூலை 4ம் தேதி…
லாஸ் ஏஞ்சல்ஸ் : 98வது அகாடமி விருதுகள் வழங்கும் விழா அடுத்த ஆண்டு மார்ச் 15ம் தேதி 6 அன்று…
விருதுநகர் : விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே உள்ள 'கூமாபட்டி' கிராமம் திடீரென ரீல்ஸ்களில் வைரலாக தொடங்கியது. 'இந்த பக்கம்…
திருவனந்தபுரம் : கேரளாவில் பருவமழை தொடர்ந்து பெய்து வருவதால், ஆறுகளின் நீர்மட்டம் உயர்ந்து வருவதாலும், அணைகள் திறக்கப்படுவதாலும் அம்மாநிலம் முழுவதும்…