India – Bharat : புரியாத ஹிந்தி பெயர்கள்.. இந்தியர்கள் மனது புண்படுகிறது.! திமுக எம்பி கனிமொழி பேட்டி.!

Published by
மணிகண்டன்

வரும் நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்வதற்காக காங்கிரஸ், திமுக, ஆம் ஆத்மி, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட 28 எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்துள்ளன. இந்த எதிர்க்கட்சிகள் கூட்டமைப்பிற்கு  ‘இந்தியா (I.N.D.I.A)’ என பெயர் வைத்து செயல்பட்டு வருகின்றனர்.

எதிர்க்கட்சிகள் கூட்டத்திற்கு இந்தியா (I.N.D.I.A) என இந்திய நாட்டின் பெயர் வரும்படி பெயர் வைக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து இந்தியா என்ற பெயரை ஆளும் பாஜக அரசு தவிர்த்து வருகிறது என மத்திய அரசின் அடுத்தடுத்த நடவடிக்கைகளில் தெளிவாக வெளிப்படுகிறது.

தற்போது இந்தியா எனும் பெயருக்கு பதில் பாரத் எனும் பெயரை குறிப்பிட வேண்டும் என்ற குரல் பாஜக ஆதரவாளர்களின் ஒருமித்த குரலாக மாறி வருகிறது. ஜி20 மாநாட்டுக்கான குடியரசு தலைவருக்கு கொடுத்த அழைப்பிதழில் பாரத குடியரசு தலைவர் என குறிப்பிட்டனர். ஏசியன் கூட்ட தொடர் அறிவிப்பில் பாரத பிரதமர் மோடி என குறிப்பிட்டு இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

வரும் செப்டம்பர் 18ஆம் தேதி கூட உள்ள நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தில் கூட இந்தியாவின் பெயர் பாரதம் என மாற்றம் பெறுவதோ அல்லது மற்ற அரசு குறிப்பேடுகளில் இந்தியாவின் பெயருக்கு பதிலாக பாரதம் என குறிக்கும் வகையில் சொல் மாறுவது பற்றிய தீர்மானங்களோ நிறைவேற்றப்படலாம் என கூறப்படும் வேளையில்,  இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர்.
இந்தியா என்ற பெயர் பாரதம் என மாற்றும் செயல்முறைகள் குறித்து திமுக எம்பி கனிமொழி சென்னை எழும்பூரில் செய்தியாளர்கள் மத்தியில் பேசுகையில், பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் அனைவரும் இந்தியா என ஒரே தளத்தில் நிற்கிறோம். இந்தியா எனும் அந்த பெயரே தற்போது பாஜகவுக்கு அச்சத்தை உண்டாகியுள்ளது.
அதனால் தான் நாட்டின் பெயரையே மாற்ற நினைக்கிறார்கள். அதற்காக தான் வரும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் சட்ட மசோதாகொண்டுவரவுள்ளனர் என தெரிகிறது. எல்லா திட்டத்திற்கும் ஹிந்தியில் புரியாதபடி பெயர் வைக்கிறார்கள். இது பெரும்பாலான இந்தியர்களின் மனதை புண்படுத்தி வருகிறது என சென்னை எழும்பூரில் திமுக எம்பி கனிமொழி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

Published by
மணிகண்டன்

Recent Posts

ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!

சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…

14 hours ago

பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுங்க…முழு உத்தரவு கொடுத்த பிரதமர் மோடி!

டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…

15 hours ago

வலிமையுடன் போரை கையாண்ட மோடிக்கு எனது பாராட்டுகள்- ரஜினிகாந்த் பேச்சு!

சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…

16 hours ago

தீவிரவாதிகள் தான் டார்கெட்…பொதுமக்கள் இல்லைங்க! பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம்!

லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…

16 hours ago

ஆப்ரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை…இந்திய விமானப் படை கொடுத்த விளக்கம்!

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

18 hours ago

போர் நிறுத்தியாச்சு வாங்க…சொந்த ஊர் திரும்பிய வீரர்களை மீண்டும் அழைக்கும் அணி நிர்வாகங்கள்?

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

19 hours ago