மொத்தமாக 32 கிலோ தங்கம்…. நடுக்கடலில் வீசப்பட்ட கடத்தல் தங்க கட்டிகள் மீட்பு.!

Published by
மணிகண்டன்

32 கடத்தல் தங்க கட்டிகளை இந்திய கடலோர காவல் படையினர் இந்திய கடலில் இருந்து மீட்டனர். 

கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் இலங்கையில் இருந்து ராமேஸ்வரம் அடுத்த மண்டபத்திற்கு சிலர் தங்க கட்டிகளை கடத்தி வருவதாக மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து இந்திய கடலோர காவல் படை உதவியுடன் அதிகாரிகள் குறிப்பிட்ட வழித்தடத்தில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது படகில் வந்த கடற்படை அதிகாரிகளை பார்த்ததும் நடுக்கடலில் தங்க கட்டைகளை வீசியுள்ளனர்.

இந்த சம்பவத்தில் படகில் இருந்த மூன்று பேர் கைது செய்யப்பட்டு அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் நடுக்கடலில் வீசப்பட்ட தங்க கட்டிகளை மீட்பதற்கு நீச்சல் பயிற்சி பெற்ற வீரர்களுடன் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

அவர்கள் அதிநவீன கருவிகள் கொண்டு கடந்த இரண்டு நாட்களாக நடுக்கடலில் தேடி வந்தனர். நேற்று தங்கக் கட்டிகளையும் கண்டுபிடித்தனர். சுமார் 32 கிலோ எடையுள்ள தங்க கட்டிகளை நடுக்கடலில் இருந்து அவர்கள் மீட்டனர். இதன் மதிப்பு சுமார் 20 கோடி ரூபாய் இருக்கும் என கூறப்படுகிறது.

Published by
மணிகண்டன்

Recent Posts

தங்கக் கடத்தல் வழக்கு: நடிகை ரன்யா ராவின் ரூ.34 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கம்.!

டெல்லி : தங்கக் கடத்தல் மற்றும் பணமோசடி வழக்கு தொடர்பாக கன்னட நடிகை ரன்யா ராவுக்குச் சொந்தமான ரூ.34.12 கோடி…

10 hours ago

இந்திய பவுலர்களுக்கு சவாலாக மாறிய இங்கிலாந்து பார்ட்னர்ஷிப்.! சதம் விளாசிய ஸ்மித் – ஹாரி புரூக்.!

பர்மிங்காம் : இந்திய அணிக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்று வருகிறது. ஷுப்மான் கில்லின் இரட்டை சதத்தால்…

11 hours ago

மறுக்கூட்டலில் இன்ப அதிர்ச்சி..,10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று பொள்ளாச்சி மாணவன் அசத்தல்.!

பொள்ளாச்சி : பொள்ளாச்சியைச் சேர்ந்த குருதீப் என்ற 10ஆம் வகுப்பு மாணவர், தனியார் பள்ளியில் பயின்று வந்த நிலையில், 2025ஆம்…

12 hours ago

தமிழக வாழ்வுரிமை கட்சி நிர்வாகி மணிமாறன் வெட்டிக் கொலை.!

காரைக்கால் : மயிலாடுதுறை அருகே தமிழக வாழ்வுரிமை கட்சியின் காரைக்கால் மாவட்ட நிர்வாகி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை…

12 hours ago

5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து.., ஹாரி புரூக் அரைசதம் – ஸ்மீத் அதிரடி சதம்.!

பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் இந்திய அணி 587 ரன்களை குவித்துள்ளது. இந்திய அணிக்கு தூணாக நின்று…

13 hours ago

“காவல்துறைக்கு நிறைய வேலைகள் உள்ளன, உங்களுக்கு ஏன் அவசரம்?” – தவெகவுக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்.!

சென்னை : திருப்புவனம் இளைஞர் மரணத்தை கண்டித்து நாளை (ஜூலை 3, 2025) எழும்பூர், ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற இருந்த…

13 hours ago