மொத்தமாக 32 கிலோ தங்கம்…. நடுக்கடலில் வீசப்பட்ட கடத்தல் தங்க கட்டிகள் மீட்பு.!

Published by
மணிகண்டன்

32 கடத்தல் தங்க கட்டிகளை இந்திய கடலோர காவல் படையினர் இந்திய கடலில் இருந்து மீட்டனர். 

கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் இலங்கையில் இருந்து ராமேஸ்வரம் அடுத்த மண்டபத்திற்கு சிலர் தங்க கட்டிகளை கடத்தி வருவதாக மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து இந்திய கடலோர காவல் படை உதவியுடன் அதிகாரிகள் குறிப்பிட்ட வழித்தடத்தில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது படகில் வந்த கடற்படை அதிகாரிகளை பார்த்ததும் நடுக்கடலில் தங்க கட்டைகளை வீசியுள்ளனர்.

இந்த சம்பவத்தில் படகில் இருந்த மூன்று பேர் கைது செய்யப்பட்டு அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் நடுக்கடலில் வீசப்பட்ட தங்க கட்டிகளை மீட்பதற்கு நீச்சல் பயிற்சி பெற்ற வீரர்களுடன் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

அவர்கள் அதிநவீன கருவிகள் கொண்டு கடந்த இரண்டு நாட்களாக நடுக்கடலில் தேடி வந்தனர். நேற்று தங்கக் கட்டிகளையும் கண்டுபிடித்தனர். சுமார் 32 கிலோ எடையுள்ள தங்க கட்டிகளை நடுக்கடலில் இருந்து அவர்கள் மீட்டனர். இதன் மதிப்பு சுமார் 20 கோடி ரூபாய் இருக்கும் என கூறப்படுகிறது.

Published by
மணிகண்டன்

Recent Posts

பாமக மாவட்ட தலைவர்கள் கூட்டத்தை புறக்கணித்த அன்புமணி! விளக்கம் கொடுத்த ராமதாஸ்!

விழுப்புரம் : மாவட்டம் திண்டிவனம் தைலாபுரத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் மாவட்ட தலைவர்கள் மற்றும் செயலாளர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.…

6 minutes ago

டாஸ்மாக் ரெய்டுக்கு மத்தியில் பிரபல தயாரிப்பாளர் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை.!

சென்னை : சென்னையில் டாஸ்மாக் நிறுவன மேலாண் இயக்குநர் விசாகன் வீடு உள்பட 5 இடங்களில் ED அதிகாரிகள் சோதனை…

16 minutes ago

ஐபிஎல் 2025 : பிளேஆஃப் சுற்றுக்கு செல்லுமா மும்பை இந்தியன்ஸ்?

மும்பை : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் எந்தெந்த அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு செல்லப்போகிறது எந்த அணி கோப்பையை வெல்ல போகிறது…

43 minutes ago

ஐபிஎல் ஸ்டார் வைபவ் சூர்யவன்ஷி 10-ம் வகுப்பு தேர்வில் ஃபெயிலானாரா? வெளியான உண்மை.!

டெல்லி : பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 இல் விளையாடிய இளம் வீரர், 14 வயது பேட்ஸ்மேன் வைபவ் சூர்யவன்ஷி…

53 minutes ago

2026 மட்டுமில்லை..எப்போதும் திமுக ஆட்சி தான்…முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேட்டி!

சென்னை : தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஐந்து நாட்கள் பயணமாக உதகைக்குச் சென்றுள்ள நிலையில், நேற்று முதல் நாளாக நடைப்பயிற்சி மேற்கொண்டு…

1 hour ago

11 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் – அரியலூர் மாவட்டம் முதலிடம்.!

சென்னை : தமிழ்நாட்டில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளோடு 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளையும் அமைச்சர் அன்பில் மகேஸ் வெளியிட்டுள்ளார்.ஆனால்,…

2 hours ago