மாநிலங்களுக்கு ரூ.1 லட்சம் கோடி வட்டியில்லா கடன் வழங்கப்பட்டுள்ளது என்று மத்திய பட்ஜெட் மீதான விளக்கக் கூட்டத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேச்சு.
சென்னை கிண்டியில் தூர்தர்ஷன் வழங்கும் மத்திய பட்ஜெட் மீதான விளக்கக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இணையமைச்சர் எல்.முருகன் உள்ளிட்ட தொழில், வர்த்தக நிறுவன பிரதிநிதிகள், மத்திய அரசு அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். மத்திய பட்ஜெட் மீதான விளக்கக் கூட்டத்தில் பேசிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த மாநிலங்களுக்கு ரூ.1 லட்சம் கோடி வட்டியில்லா கடன் வழங்கப்பட்டுள்ளது.
கட்டமைப்புகளை மேம்படுத்த மாநிலங்களுக்கு வழங்கப்படும் நிதியானது ரூ.5.5 லட்சம் கோடியிலிருந்து ரூ.7.5 லட்சம் கோடியாக மத்திய அரசு உயர்த்தியுள்ளது. இதில் ரூ.1 லட்சம் கோடி வட்டியில்லா கடனாக கொடுக்கப்படுகிறது என்று தெரிவித்தார். சோசலிச திட்டத்தின் மூலம் நம்முடைய நாட்டிலேயே அரசு முதலீட்டில் உற்பத்தி கடந்த 60 ஆண்டுகளாக நடந்துகொண்டிருந்தது. ஆனால் அது முறையாக தொடரப்படவில்லை. சில முக்கிய முடிவுகள் எடுக்கப்படாமல் நிலுவையில் வைக்கப்பட்டன என்றும் கூறினார்.
இதனைத்தொடர்ந்து, விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையான கோதாவரி -பெண்ணாறு-காவிரி நதிகள் இணைப்பு திட்டத்தை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நடப்பு பட்ஜெட்டில் இறுதி செய்து தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளார் என்று மத்திய இணையமைச்சர் எல்.முருகன் மத்திய பட்ஜெட் மீதான விளக்கக் கூட்டத்தில் தெரிவித்தார்.
கொல்கத்தா : மேற்கு வங்காளத்தில் உள்ள ஒரு சட்டக் கல்லூரியில் மாணவி ஒருவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகக் கூறப்படும்…
சென்னை : நேற்று கச்சத்தீவு அருகே ராமேஸ்வரம் மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி…
சென்னை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்தில் அஜித் என்ற இளைஞரின் மரணம் தொடர்பாக, ஆறு காவலர்கள் இடைநீக்கம்…
சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்திற்கு நகை திருடியதாக கூறி விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட இளைஞர் அஜித்…
ஒடிசா : ஒடிசா மாநிலம் பூரியில் உள்ள ஒரு கோயில் அருகே ஏற்பட்ட கூட்ட நெரிசலுக்கு ஒடிசா முதல்வர் மோகன்…
சென்னை : தமிகத்தில் வீட்டு மின் இணைப்புகளுக்கு எந்தவித மின்கட்டண உயர்வும் இல்லை என அமைச்சர் சிவசங்கர் விளக்கம் அளித்துள்ளார்.…