மாநிலங்களுக்கு ரூ.1 லட்சம் கோடி வட்டியில்லா கடன் வழங்கப்பட்டுள்ளது என்று மத்திய பட்ஜெட் மீதான விளக்கக் கூட்டத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேச்சு.
சென்னை கிண்டியில் தூர்தர்ஷன் வழங்கும் மத்திய பட்ஜெட் மீதான விளக்கக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இணையமைச்சர் எல்.முருகன் உள்ளிட்ட தொழில், வர்த்தக நிறுவன பிரதிநிதிகள், மத்திய அரசு அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். மத்திய பட்ஜெட் மீதான விளக்கக் கூட்டத்தில் பேசிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த மாநிலங்களுக்கு ரூ.1 லட்சம் கோடி வட்டியில்லா கடன் வழங்கப்பட்டுள்ளது.
கட்டமைப்புகளை மேம்படுத்த மாநிலங்களுக்கு வழங்கப்படும் நிதியானது ரூ.5.5 லட்சம் கோடியிலிருந்து ரூ.7.5 லட்சம் கோடியாக மத்திய அரசு உயர்த்தியுள்ளது. இதில் ரூ.1 லட்சம் கோடி வட்டியில்லா கடனாக கொடுக்கப்படுகிறது என்று தெரிவித்தார். சோசலிச திட்டத்தின் மூலம் நம்முடைய நாட்டிலேயே அரசு முதலீட்டில் உற்பத்தி கடந்த 60 ஆண்டுகளாக நடந்துகொண்டிருந்தது. ஆனால் அது முறையாக தொடரப்படவில்லை. சில முக்கிய முடிவுகள் எடுக்கப்படாமல் நிலுவையில் வைக்கப்பட்டன என்றும் கூறினார்.
இதனைத்தொடர்ந்து, விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையான கோதாவரி -பெண்ணாறு-காவிரி நதிகள் இணைப்பு திட்டத்தை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நடப்பு பட்ஜெட்டில் இறுதி செய்து தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளார் என்று மத்திய இணையமைச்சர் எல்.முருகன் மத்திய பட்ஜெட் மீதான விளக்கக் கூட்டத்தில் தெரிவித்தார்.
சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…
சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…
லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…