கிசான் நிதி முறைகேட்டை கண்டறிந்தது தமிழக அரசு தான் – முதலமைச்சர் பழனிசாமி

Published by
கெளதம்

கிசான் நிதி முறைகேட்டிற்கு மத்திய அரசின் அறிவிப்பே காரணம் என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தடுப்பு பணிகள் குறித்து ஆய்வு செய்ய 12 மாவட்டங்களுக்கு முதல்வர் பழனிசாமி சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இதுவரை தமிழகத்தில் 19 மாவட்டங்களுக்கு சென்று ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்தி, அதற்கான உரிய உத்தரவுகளை பிறப்பித்து உள்ளார்.

இந்நிலையில், இன்று 20-வது மாவட்டமாக திருவண்ணாமலை மாவட்டத்திற்கு கொரோனா தடுப்பு குறித்து ஆய்வு நடத்த முதல்வர் சென்றுள்ளார். அங்கு முதல்கட்டமாக திருவண்ணாமலையில் ரூ.52.59 கோடியில் 31 முடிவுற்ற திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார். பின்னர் 16 துறைகள் சார்பில் 18,279 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை அவர் வழங்கினார். மேலும், ரூ.19.20 கோடியில் 11 புதிய திட்ட பணிகளுக்கு முதலமைச்சர் பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.

இதையடுத்து, அங்குள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெறும் ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்று கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். இதனையடுத்து பேசிய முதல்வர், கிசான் நிதி முறைகேட்டிற்கு மத்திய அரசின் அறிவிப்பே காரணம் என்று கூறினார். கடந்த 4 மாதத்தில் 41 லட்சத்தில் இருந்து 46 லட்சமாக விவசாயிகள் எண்ணிக்கை உயர்ந்துள்ளது.

கிசான் திட்ட முறைகேட்டில் தற்போது 18 பேர் கைது, 81 ஒப்பந்த பணியாளர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். 13 மாவட்டங்களில் கடந்த 4 மாதத்தில் இந்த முறைகேடு நடந்துள்ளது. இந்நிலையில், கிசான் திட்டத்தில் முறைகேடு தொடர்பாக சி.பி.சி.ஐ.டி விசாரணை நடந்து வருகிறது என தெரிவித்தார்.

Published by
கெளதம்

Recent Posts

“140 கோடி மக்களின் வாழ்த்துகளையும், நம்பிக்கையையும் சுமந்து செல்கிறார் சுக்லா”- பிரதமர் மோடி வாழ்த்து.!

“140 கோடி மக்களின் வாழ்த்துகளையும், நம்பிக்கையையும் சுமந்து செல்கிறார் சுக்லா”- பிரதமர் மோடி வாழ்த்து.!

டெல்லி : இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷூ சுக்லாவை சுமந்து கொண்டு ஸ்பேஸ்-எக்ஸ் ராக்கெட் விண்ணில் பாய்ந்தது. ஆக்சியம்-4 விண்வெளி…

57 seconds ago

நீலகிரி, கோவைக்கு இன்றும், நாளையும் ஆரஞ்ச் அலர்ட் – வானிலை மையம் எச்சரிக்கை.!

சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்,…

2 minutes ago

400 கிலோ யுரேனியத்தை பதுக்கிய ஈரான்? அமெரிக்கா தாக்குதல் என்னதான் ஆச்சு.? டிரம்புக்கு ஷாக்.!

அமெரிக்கா : அமெரிக்காவின் B-2 போர் குண்டுவீச்சு விமானங்கள் 'ஆபரேஷன் மிட்நைட் ஹேமர்' என்ற திட்டத்தின் கீழ்,  ஈரானின் மூன்று…

42 minutes ago

விண்ணில் சீறிப் பாய்ந்தது ‘ஃபால்கன் 9 ராக்கெட்’.., 41 ஆண்டுகளுக்கு பிறகு விண்வெளியில் இந்தியர்..!

அமெரிக்கா : இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா உட்பட 4 விண்வெளி வீரர்களுடன் ஃபால்கன்-9 ராக்கெட் பல தடைகளை…

2 hours ago

நடிகர் கிருஷ்ணா தலைமறைவு? கைது செய்ய 5 தனிப்படைகள் அமைப்பு.!

சென்னை : கோக்கைன் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வழக்கின் விசாரணை மேலும் தீவிரமாகிறது. ஸ்ரீகாந்த்…

2 hours ago

சற்று நேரத்தில் விண்வெளி பயணம்.., டிராகன் விண்கலனின் தொலைதொடர்பு சோதனை நிறைவு – ஸ்பேஸ் எக்ஸ்!

அமெரிக்கா : சர்வேதேச விண்வெளி மையத்துக்கு செல்வதற்காக ஆக்சியம் எனும் தனியார் நிறுவனம் இஸ்ரோ மற்றும் நாசாவுடன் இணைந்து 'ஆக்சியம்…

3 hours ago