இந்த போஸ்ட் மேன் வேலையை கூட ஆளுநர் செய்யாமல் இருப்பது அழகல்ல..! – முதல்வர் மு.க.ஸ்டாலின்

Published by
லீனா

8  மக்களின் கோரிக்கையான நீட் விலக்கு  முன்வடிவுகளை குடியரசு தலைவருக்கு அனுப்பும் போஸ்ட் மேன் வேலையை கூட ஆளுநர் செய்ய மறுப்பது அவருடைய பதவிக்கு இது அழகல்ல என முதல்வர் பேச்சு.

பெரியார் திடலில் நடைபெற்ற திராவிடர் கழகத்தின் நீட் தேர்வு எதிர்ப்பு பிரச்சார பயணம் நிறைவு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், இன்றைக்கு தமிழ்நாட்டில் அமைந்துள்ள திராவிட மாடல் ஆட்சியை எந்த சூழலிலும், வழி நடத்தி செல்வேன். இது இந்தியாவிற்கே எடுத்துக்காட்டாக அமையக்கூடிய ஒரு ஆட்சி. கருப்பையும் சிவப்பையும், யாராலும் பிரிக்க முடியாது.

தமிழினம் முன்னேறுவது சிலருக்கு பிடிக்கவில்லை, அதனால் தான் நம்மை எதிர்க்கிறார்கள்; பெண் விடுதலை, தீண்டாமை ஒழிப்பு இதனால் தான் தமிழ்நாடு தலை நிமிர்ந்து நிற்கிறது. பெரியார் போல எந்த தலைவரும் எந்த இனத்திற்கும் கிடைத்ததில்லை என தெரிவித்துள்ளார்.

மேலும், எந்த நுழைவுத்தேர்வு எந்த வகையிலும் நுழைய கூடாது என்பதே நமது கொள்கை. ஆளுநரிடம் நம் கேட்பது ஒப்புதல் இல்லை, முன்வடிவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்க கேட்கிறோம். 8  மக்களின் கோரிக்கையான நீட் விலக்கு  முன்வடிவுகளை குடியரசு தலைவருக்கு அனுப்பும் போஸ்ட் மேன் வேலையை கூட ஆளுநர் செய்ய மறுப்பது அவருடைய பதவிக்கு இது அழகல்ல என்று விமர்சித்துள்ளார்.

Recent Posts

அச்சப்படாதீங்க மக்களே வெளியே வாங்க…தைரியம் கொடுத்த ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா!

அச்சப்படாதீங்க மக்களே வெளியே வாங்க…தைரியம் கொடுத்த ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா!

டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் ​​மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…

3 hours ago

விராட் கோலி ஓய்வு: ‘அந்தக் கண்ணீரை நான் நினைவில் கொள்வேன்’ – அனுஷ்கா சர்மாவின் உருக்கமான பதிவு.!

மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…

3 hours ago

மே 30 இறுதிப்போட்டி? மீண்டும் ஐபிஎல்லை தொடங்க திட்டம் போட்ட பிசிசிஐ!

டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…

4 hours ago

5 நாள் பயணமாக உதகை சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!

ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…

4 hours ago

”நெருங்கவே முடியாது.., அனைத்து ராணுவ பிரிவுகளும் தயார் நிலையில் உள்ளன” – துணை அட்மிரல் ஏ.என். பிரமோத்.!

டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…

5 hours ago

“எங்களின் இலக்கு பயங்கரவாதிகள் தான்” இந்திய ஏர் மார்ஷல் பார்தி பேச்சு!

டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…

5 hours ago