8 மக்களின் கோரிக்கையான நீட் விலக்கு முன்வடிவுகளை குடியரசு தலைவருக்கு அனுப்பும் போஸ்ட் மேன் வேலையை கூட ஆளுநர் செய்ய மறுப்பது அவருடைய பதவிக்கு இது அழகல்ல என முதல்வர் பேச்சு.
பெரியார் திடலில் நடைபெற்ற திராவிடர் கழகத்தின் நீட் தேர்வு எதிர்ப்பு பிரச்சார பயணம் நிறைவு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், இன்றைக்கு தமிழ்நாட்டில் அமைந்துள்ள திராவிட மாடல் ஆட்சியை எந்த சூழலிலும், வழி நடத்தி செல்வேன். இது இந்தியாவிற்கே எடுத்துக்காட்டாக அமையக்கூடிய ஒரு ஆட்சி. கருப்பையும் சிவப்பையும், யாராலும் பிரிக்க முடியாது.
தமிழினம் முன்னேறுவது சிலருக்கு பிடிக்கவில்லை, அதனால் தான் நம்மை எதிர்க்கிறார்கள்; பெண் விடுதலை, தீண்டாமை ஒழிப்பு இதனால் தான் தமிழ்நாடு தலை நிமிர்ந்து நிற்கிறது. பெரியார் போல எந்த தலைவரும் எந்த இனத்திற்கும் கிடைத்ததில்லை என தெரிவித்துள்ளார்.
மேலும், எந்த நுழைவுத்தேர்வு எந்த வகையிலும் நுழைய கூடாது என்பதே நமது கொள்கை. ஆளுநரிடம் நம் கேட்பது ஒப்புதல் இல்லை, முன்வடிவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்க கேட்கிறோம். 8 மக்களின் கோரிக்கையான நீட் விலக்கு முன்வடிவுகளை குடியரசு தலைவருக்கு அனுப்பும் போஸ்ட் மேன் வேலையை கூட ஆளுநர் செய்ய மறுப்பது அவருடைய பதவிக்கு இது அழகல்ல என்று விமர்சித்துள்ளார்.
டெல்லி : தங்கக் கடத்தல் மற்றும் பணமோசடி வழக்கு தொடர்பாக கன்னட நடிகை ரன்யா ராவுக்குச் சொந்தமான ரூ.34.12 கோடி…
பர்மிங்காம் : இந்திய அணிக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்று வருகிறது. ஷுப்மான் கில்லின் இரட்டை சதத்தால்…
பொள்ளாச்சி : பொள்ளாச்சியைச் சேர்ந்த குருதீப் என்ற 10ஆம் வகுப்பு மாணவர், தனியார் பள்ளியில் பயின்று வந்த நிலையில், 2025ஆம்…
காரைக்கால் : மயிலாடுதுறை அருகே தமிழக வாழ்வுரிமை கட்சியின் காரைக்கால் மாவட்ட நிர்வாகி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை…
பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் இந்திய அணி 587 ரன்களை குவித்துள்ளது. இந்திய அணிக்கு தூணாக நின்று…
சென்னை : திருப்புவனம் இளைஞர் மரணத்தை கண்டித்து நாளை (ஜூலை 3, 2025) எழும்பூர், ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற இருந்த…