மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் தை பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, இந்த ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு இன்று அதாவது ஜனவரி 15 அவனியாபுரத்தில் துவங்கி நடந்து வருகிறது. இதற்காக திருப்பரங்குன்றம் முதல் அவனியாபுரம் சாலையில் வாடிவாசல் மேடை வரை இருபுறமும் மூங்கில் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஜல்லிக்கட்டை, உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவுப்படி அமைக்கப்பட்ட ஓய்வு பெற்ற நீதிபதி திரு. மாணிக்கம் அவர்கள் தலைமையிலான குழு, கண்காணித்தனர்.மேலும் இந்த விழாவில், வருவாய்,பேரிடர்,தொழில்நுட்ப துறைகளின் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாவட்ட கலெக்டர் மற்றும் அதிகாரிகள் ஆகியோர் போட்டிக்கான ஏற்பாட்டை பார்வையிட்டனர். இந்த போட்டியில் பங்கேற்க 700 காளைகள் பதிவு செய்யப்பட்டு அடையாள அட்டை வழங்கப்பட்டிருந்தன. 730 மாடுபிடி வீரர்கள் பதிவு செய்திருந்தனர். போட்டி துவங்குவதற்கு முன்னர், காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கு மருத்துவ பரிசோதனை நடந்தது. தொடர்ந்து மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி ஏற்று கொண்டனர். இதை தொடர்ந்து போட்டி துவங்கியது.
ஆந்திர பிரதேசம்: சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, சிறப்பு யோகா தபால் தலையை பிரதமர் மோடி வெளியிட்டுள்ளார். ஆந்திர பிரதேசத்தின்…
ரெஹோவோட் : ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே நடந்து வரும் போருக்கு முடிவே இல்லை என்று தெரிகிறது. ஈரானின் அணுசக்தி தளங்கள்,…
புவனேஸ்வர் : ஒடிசா மாநிலத்தின் புவனேஸ்வரில் நேற்று நடைபெற்ற விழாவில் பிரதமர் மோடி உரையாற்றினார். ஒடிசாவில் பாஜக அரசின் முதலாமாண்டு…
ஈரான் : ஈரான் - இஸ்ரேல் போர் பதற்றம் காரணமாக ஈரானில் தங்கி கல்வி பயின்று வரும் இந்திய மாணவர்களை…
சென்னை : சென்னையில் ரூ.80 கோடி செலவில் புதுப்பிக்கப்பட்டுள்ள வள்ளுவர் கோட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார். ‘குறள்…
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டின் முதல் நாளில் இந்தியா அபாரமாக விளையாடி ரன்களை குவித்தது. தொடக்க வீரர்…