அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு விழாவை சுமுகமாக நடத்த ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி மாணிக்கம் தலைமையில் ஒருங்கிணைப்பு குழு ஒன்றை அமைத்து ஜல்லிக்கட்டு நடத்த உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. அதன் படி இன்று ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கி நடந்து வருகிறது.இந்த உயர்நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவுக்கு எதிராக தென்கால் பாசன விவசாயிகள் சங்கம் சார்பில் அதன் தலைவர் ஏ.கே.கண்ணன், உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார்.
அதில், அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை பல ஆண்டுகளாக தென்கால் பாசன விவசாயிகள் சங்கம் தான் நடத்தி வருகிறது. இது எங்களது பாரம்பரிய உரிமை ஆகும் என்று அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.எனவே இந்த மதுரை கிளையின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என அந்த மணுவில் கூறப்பட்டு இருந்தது. இந்நிலையில், உத்தநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.போப்டே தலைமையிலான அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. விசாரணையில் தற்போது உள்ள நிலையில் ஜல்லிக்கட்டை நிறுத்த நாங்கள் விரும்பவில்லை. வேண்டுமானால் நீங்கள் மேல்முறையீடு செய்யலாம் என அந்த மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது என்பது செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தெஹ்ரான் : இஸ்ரேல் - ஈரான் இரண்டுக்கும் இடையே 10-வது நாளாக போர் நடைபெற்று வருவது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.…
சென்னை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, மத்திய அரசின்…
சென்னை : தமிழக வெற்றிக் கழக (த.வெ.க) தலைவரும், தமிழ் திரையுலகின் முன்னணி நடிகருமான விஜய்யின் 51வது பிறந்தநாளை முன்னிட்டு, அவரது…
தெஹ்ரான் : இஸ்ரேலின் பென் குரியன் சர்வதேச விமான நிலையம் உட்பட பல முக்கிய இடங்களை குறிவைத்து ஈரான் தாக்குதல்…
சென்னை : த.வெ.க தலைவர் விஜய் இன்று தனது 51-வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவருடைய பிறந்த நாளை முன்னிட்டு,…
சனா : ஈரான்-இஸ்ரேல் மோதல் தீவிரமடைந்து 10-வது நாளை எட்டியுள்ள நிலையில், ஏமனின் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தலைமையிலான ராணுவம், “போரில்…