மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவிட கட்டுமான பணிகளை கண்காணிக்க சிறப்பு அதிகாரியை நியமித்தது தமிழக அரசு.
சென்னை மெரினா கடற்கரையில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவிடம் அமைக்க கடந்த 2018ம் தமிழக அரசு ரூ.50 கோடி ஒதுக்கீடு செய்து, அதே ஆண்டு மே மாதத்தில் கட்டுமான பணிகளுக்கு முதல்வர் பழனிசாமி அடிக்கல் நாட்டினார். மேலும், நினைவு மண்டபத்தில் அருங்காட்சியகம் மற்றும் அறிவுசார் பூங்காவில் டிஜிட்டல் வீடியோ காட்சி வைக்க ரூ.11.84 கோடியில் பணி நடந்து வருகிறது. இந்த நினைவிடம் ஒரு பறவை போன்ற அமைப்பில் கட்டப்பட்டு வருகிறது.
இந்த பணியை 2 மாதங்களுக்குள் முடித்து, ஜெயலலிதா பிறந்த நாளான பிப்ரவரி 24ம் தேதி நினைவிடத்தை திறக்க நடவடிக்கை எடுக்க முதல்வர் பழனிசாமி பொதுப்பணித்துறைக்கு உத்தரவிட்டார். இந்நிலையில், ஜெயலலிதா நினைவிட கட்டுமான பணிகளை கண்காணிக்க பொதுப்பணித்துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற பாண்டியராஜனை சிறப்பு அதிகாரியாக நியமித்தது தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
பெங்களூர் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் கோலாகலமாக தொடங்கி பெங்களூர் அணியின் வெற்றியுடன் நிறைவடைந்தது. இந்த சீசனை தொடர்ந்து அடுத்ததாக அடுத்த…
சென்னை : பா.ம.க நிறுவனர் ராமதாஸ் மற்றும் அவரது மகன் அன்புமணி இடையே எழுந்த பிரச்சினை என்பது அரசியல் வட்டாரத்தில் ட்ரென்டிங்…
காசா : இஸ்ரேல்-ஹமாஸ் போரால் பாதிக்கப்பட்ட காஸாவில் உணவுப் பற்றாக்குறை மற்றும் கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக, இந்தியாவில் ரூ.5…
பெங்களூர் : சின்னசாமி மைதானத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணியின் ஐபிஎல் வெற்றி விழாவின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில்…
வாஷிங்டன் : அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்புக்கும், டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனங்களின் தலைவர் எலான் மஸ்க்குக்கும் இடையே ஏற்பட்ட…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனங்களின் தலைமை நிர்வாகி எலான் மஸ்க்…