தந்தை-மகன் உயிரிழந்த வழக்கில் கைதான ஆய்வாளர் ஸ்ரீதர், காவலர் வெயில்முத்து ஆகியோரின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து மதுரை முதலாம் குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சாத்தான்குளம் கொலை வழக்கில் சிபிசிஐடி போலீசார் ஆய்வாளர் ஸ்ரீதர் உட்பட 10 கைது செய்து வழக்குப்பதிவு செய்தனர். இதையடுத்து, தற்போது இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் சிபிஐ முதலில் கைது செய்யப்பட்ட ஸ்ரீதர் உட்பட 5 பேரை காவலில் எடுத்து விசாரித்தனர்.
அதன்பின் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த்தும்போது, ஆய்வாளர் ஸ்ரீதருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் தன்னை மருத்துவமனையில் சிகிக்சை பெற அனுமதிக்கவேண்டும் என நீதிபதியிடம் அவர் தெரிவித்தார். அதன்படி, நீதிபதி சிறையில் உள்ள மருத்துவமனையில் சிகிக்சை பெற்றுக்கொள்ளலாம் என அறிவுறுத்தினார். மேலும், அவரை மதுரை மத்திய சிறையில் இருந்து மதுரை ராஜாஜி மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டு பரிசோதனை நடைபெற்றது.
இந்நிலையில், ஆய்வாளர் ஸ்ரீதர், காவலர் வெயில்முத்து ஆகியோர் மதுரை முதலாம் குற்றவியல் நீதிமன்றத்தில் ஜாமீன் மனு கேட்டு வழக்கு தொடர்ந்தனர். அந்த வழக்கு இன்று மதுரை முதலாம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில், இருவரின் ஜாமின் மனுவையும் நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.
லீட்ஸ்: இந்திய கிரிக்கெட்டின் உருவாகி வரும் நட்சத்திரமான வைபவ் சூர்யவம்சி, இங்கிலாந்து அண்டர்-19 அணிக்கு எதிரான இளையோர் ஒருநாள் போட்டியில்…
வாஷிங்டன்: டொனால்ட் டிரம்பின் நெருங்கிய ஆதரவாளரும், மாகா இயக்கத்தின் முக்கிய பிரமுகருமான லாரா லூமர், எலான் மஸ்க் தொடங்கவுள்ள புதிய…
சிவகங்கை : மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவில் காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார், நகை திருட்டு வழக்கில் விசாரணைக்காக…
சென்னை: தமிழக வெற்றிக் கழகம் (தவெக), 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு 2 கோடி உறுப்பினர்களை சேர்க்கும் இலக்கை அடைய…
பர்மிங்காம்: இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் (ஜூலை 2-6, 2025, எட்ஜ்பாஸ்டன்), இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில்…
தூத்துக்குடி : சென்னை விமான நிலையத்தில் இருந்து தூத்துக்குடிக்கு ஜூலை 6, 2025 காலை 10:10 மணிக்கு புறப்பட இருந்த ஸ்பைஸ்ஜெட்…