Tamilnadu CM MK stalin [Image source : Twitter/@mkstalin]
மோடி என்ற பெயர் குறித்து அவதூறாக பேசியது தொடர்பாக பதிவான அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட 2 தண்டனையை நிறுத்தி வைத்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. உச்சநீதிமன்றம் தீர்ப்பை தொடர்ந்து, காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி எம்பி பதவியில் தொடர்வார் என்றும் வரும் திங்கள்கிழமையே நாடாளுமன்றம் செல்வார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
இதுதொடர்பான நடவடிக்கையில் காங்கிரஸ் தலைமை இறங்கியுள்ளது. அதன்படி, மக்களவை சபாநாயகருக்கு கடிதம் எழுதவும் காங்கிரஸ் முடிவு செய்துள்ளது. இந்த நிலையில், உச்சநீதிமன்றம் தீர்ப்பு குறித்து முதலமைச்சர் முக ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில், ராகுல் காந்தி வழக்கில் நீதி வென்றுள்ளது. அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு தண்டனையை நிறுத்தி வைத்த உச்சநீதிமன்ற தீர்ப்பை வரவேற்கிறோம். இதன் மூலம் சகோதரர் ராகுல் காந்தியை வயநாடு தக்கவைத்து கொண்டுள்ளது. நீதித்துறையின் வலிமை, ஜனநாயகத்தின் விழுமியங்களை பாதுகாப்பதை தீர்ப்பு உறுதி செய்துள்ளது என தெரிவித்துள்ளார்.
சென்னை : மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தில் (மதிமுக) ஏற்பட்டுள்ள அசாதாரண சூழலுக்கு தான் காரணம் இல்லை என்று மல்லை…
வாஷிங்டன் : விண்வெளி பயணத்தை வெற்றிகரமாக முடித்துக் கொண்டு சர்வதேச விண்வெளி மையத்திலிருந்து இன்று சுபான்ஷூ சுக்லா குழுவினர் பூமிக்கு…
லார்ட்ஸ் : லார்ட்ஸில் இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணிக்கு 193 ரன்களை இலக்காக நிர்ணயித்தது இங்கிலாந்து…
சென்னை : கீழ்ப்பாக்கத்தில் ஓ. பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் அடுத்தகட்ட அரசியல் நகர்வுகள் குறித்து முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடத்தினார்.…
கர்நாடகா : பழம்பெரும் நடிகை சரோஜா தேவி இன்று காலமானார். தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் 200-க்கும்…
சென்னை : பழம்பெரும் நடிகை சரோஜா தேவி, வயது மூப்பு காரணமாக இன்று (ஜூலை 14) பெங்களூருவில் உள்ள அவரது இல்லத்தில்…