சீருடை அணியாத காவலருடன் ஏற்பட்ட வாக்குவாதத்தில் நடத்துனர் மாரடைப்பால் மரணம்!

Published by
மணிகண்டன்

கடலூரில், அரசு பேருந்து நடத்துனராக இருந்தவர் கோபிநாத், இவர் இன்று, கடலூர் அருகே அரசு பேருந்தில் திட்டக்குடி வழி செல்லும் பேருந்தில் நடத்துனராக இருந்துள்ளார். அதே அரசு பேருந்தில் ஓட்டுனராக சாரங்கபாணியும் இருந்துள்ளார். அப்போது திட்டக்குடி காவல் நிலையத்தை சேர்ந்த காவலர் பழனிவேல் என்பவர் சீருடை அணியாமல் பேருந்தில் ஏறியுள்ளார். அவரிடம் நடத்துநர் கோபிநாத் டிக்கெட் கேட்டு உள்ளார்.

அப்போது காவலர் பழனிவேல், தான் காவலர் எனவும் அதனால் டிக்கெட் எடுக்க முடியாது என தெரிவித்ததக கூறப்படுகிறது. ஆனால் கோபிநாத், தாங்கள் காவலர் சீருடை அணியவில்லை. மேலும், காவலர் அடையாள அட்டையை காண்பிக்கும்படி,  கூறியுள்ளார். இதனால் நடத்துனர் கோபிநாத்துக்கும்,  காவலர் பழனிவேலுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த வாக்குவாதம் சுமார் பத்து கிலோமீட்டர் தூரம் பேருந்தில் நடந்து உள்ளது.

இந்த வாக்குவாதத்தில் நடத்துநர் கோபிநாத்துக்கும் ஆதரவாக பயணிகளும் காவலர் பழனிவேலிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதில் நடத்துனர் கோபிநாத் திடீரென்று மாரடைப்பால் மயங்கி விழுந்து உயிரிழந்தார். இதனால் சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தை முற்றுகையிட்டு தற்போது அதிகாரிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

Published by
மணிகண்டன்

Recent Posts

குறுக்க.., குறுக்க வந்த மழை.!! கடைசி ஓவரில் திக் திக் நிமிடம்.! குஜராத் திரில் வெற்றி..!

குறுக்க.., குறுக்க வந்த மழை.!! கடைசி ஓவரில் திக் திக் நிமிடம்.! குஜராத் திரில் வெற்றி..!

மும்பை: ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே மும்பையில்…

6 hours ago

“நேற்று பிறந்தவர்கள் எல்லாம் நான்தான் அடுத்த முதலமைச்சர் என்கிறார்கள்” – மு.க.ஸ்டாலின்.!

சென்னை : அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கழகத் தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் முன்னிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சார்ந்த…

7 hours ago

MI vs GT : குஜராத் அணியின் மிரட்டல் பவுலிங்.., திணறிய மும்பை.!! இதுதான் டார்கெட்.!

மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும்…

9 hours ago

ராஜஸ்தான்-பாக்., எல்லையில் போர் ஒத்திகை.., NOTAM எச்சரிக்கை கொடுத்த இந்தியா.!

டெல்லி : ராஜஸ்தான்-பாகிஸ்தான் எல்லையில் நாளை (மே-7) மாலை 3.30 மணியில் இருந்து மே -8 காலை 9.30 மணி…

9 hours ago

பலுசிஸ்தான் ஐஇடி குண்டுவெடிப்பில் 7 பாகிஸ்தான் வீரர்கள் பலி.!

பாகிஸ்தான் : பாகிஸ்தானின் தெற்கு மாகாணமான பலுசிஸ்தான் மாகாணத்தில் ராணுவ வாகனத் தொடரணியை குறிவைத்து சக்திவாய்ந்த வெடிகுண்டு (IED) வெடித்ததில்…

10 hours ago

காஷ்மீர் பள்ளத்தாக்கில் கவிழ்ந்த ராணுவ வாகனம்.., இந்திய ராணுவ வீரர்கள் 2 பேர் உயிரிழப்பு.!

குப்வாரா : ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகே இன்று, இராணுவ வாகனம் பள்ளத்தாக்கில் உருண்டு விழுந்ததில்…

11 hours ago