யாஸ் புயல் எதிரொலியால் கன்னியாகுமரி மாவட்டத்தில் 2 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்.
மத்திய கிழக்கு வங்கக் கடல் பகுதியில் அதி தீவிரப் புயலாக வலுப்பெற்ற யாஸ் புயல்,தற்போது ஒடிசா-மேற்கு வங்கம் இடையே இன்று காலை 9 மணியிலிருந்து கரையைக் கடக்க தொடங்கியது. தற்போது அது முழுவதுமாக கரையை கடந்து முடித்துள்ளது. அந்த புயல் தற்போது பாலசோர் என்ற இடத்தில் மையம் கொண்டுள்ளது மெதுவாக வடக்கு மற்றும் வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து வலுவிழந்து தீவிர புயலாக மாறும் என்றும் அதற்கு பிறகு புயலாக மாறும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இதனுடைய தாக்கம் காரணமாக வட தமிழகத்தில் 40 கிலோ மீட்டர் வேகம் வரை காற்று வீச வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் யாஸ் புயல் எதிரொலியால், கடந்த இரண்டு நாட்களாக கன்னியாகுமரியில் தொடர்ச்சியாக கனமழை பெய்து வருகிறது. அந்த வகையில் இரன்டு கன்னியாகுமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடும் சூறைக்காற்றுடன் கூடிய கனமழை வருவதால் மழைநீர் வீட்டிற்குள் புகுந்துள்ளது. கனமழை காரணமாக கன்னியாகுமாரி மாவட்டம் வெள்ளக்காட்சியாக காணப்படுகிறது.
இந்த நிலையில், தற்போது கன்னியாகுமரி மாவட்டத்தில் 2 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும் வெப்பச்சலனம் காரணமாக தேனி, திண்டுக்கல், தென்காசி, மதுரை, நீலகிரி, ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை முதல் மிக கன மழை பெய்வதற்கான வாய்ப்புகள் இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
இஸ்ரேல் : ஈரான்-இஸ்ரேல் பதட்டங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இஸ்ரேல் மீது ஏவுகணைத் தாக்குதல்களை ஈரான் தீவிரப்படுத்தி வருகிறது. முன்னதாக,…
சென்னை : நிதி முறைகேடு செய்து விட்டதாக, சன் நெட்வொர்க்கின் தலைவரும், தனது சகோதரருமான கலாநிதி மாறனுக்கு, முன்னாள் மத்திய…
இஸ்ரேல் : ஈரானுடனான மோதல் காரணமாக தனது மகனின் திருமணம் இரண்டாவது முறையாக ஒத்திவைக்கப்பட்டதாகவும், இது தனது குடும்பத்தினர் செலுத்திய…
சென்னை : தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் மீது மேல் நடவடிக்கை எடுக்கஅமலாக்கத்துறைக்கு இடைக்கால தடை விதித்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. டாஸ்மாக்…
சென்னை : சென்னை விமான நிலையத்தில் இன்று (ஜூன் 20) டெல்லி, மும்பை, மற்றும் தூத்துக்குடி செல்லும் 8 விமானங்கள்…
சென்னை : ஒவ்வொரு ஆண்டும் இன்று (ஜூன் 20) உலகம் முழுவதும் 'உலக அகதிகள் தினம்' என அனுசரிக்கப்படுகிறது. போர்,…