காவிரி குண்டாறு இணைப்புத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் கர்நாடக அரசு மனுத்தாக்கல் செய்துள்ளது.
காவிரி -குண்டாறு இணைப்பு மூலம் தமிழகத்தில் கூடுதலாக 45 டிஎம்சி தண்ணீர் கிடைக்க வாய்ப்பிருக்கிறது. இதனால் எங்களுக்கு காவிரி இருந்து கிடைக்கக்கூடிய தண்ணீர் அளவு குறைந்துவிடும் என்ற காரணத்தினால் உச்சநீதிமன்றத்தில் கர்நாடக அரசு இந்த திட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரி மனுத்தாக்கல் செய்துள்ளது.
காவிரி ,குண்டாறு, வைகை அணை இணைப்பு திட்டத்தால் வெள்ள காலங்களில் காவிரியில் உபரி நீராக வெளியேறும் நீரை கரூர் மாவட்டம் மாயனூர் தடுப்பணையில் தடுத்து. திருச்,சி தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, விருதுநகர் உள்ளிட்ட பகுதிகளில் வறண்ட பகுதிகள் வழியாக குண்டாற்றுடன் பாசனக் கால்வாய்களை வெட்டி இணைப்பதன் மூலமாக இப்பகுதியில் நீர்வளம், நிலவளம் பெறும் வகையில் இந்த திட்டம் உருவாக்கப்பட்டது.
கர்நாடக அரசின் மேகதாதுவில் அணை கட்டும் திட்டத்திற்கு தமிழக அரசு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், தமிழக அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் காவிரி- குண்டாறு இணைப்புத் திட்டத்திற்கு எதிராக கர்நாடக அரசு உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளது.
1958- ஆம் ஆண்டு காவிரி, குண்டாறு, வைகை திட்டத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது. கடந்த 2008ஆம் ஆண்டு ரூ.3290 கோடியில் காவிரி – குண்டாறு இணைப்பு திட்டத்தை தமிழக அரசு அறிவித்தது. இந்த திட்டத்தை 14,000 கோடி ரூபாய் செலவில் செயல்படுத்தப்போவதாக கடந்த ஆண்டு தமிழக அரசு அறிவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : இந்தியா முழுவதும் நடந்த பாதுகாப்பு ஒத்திகையில் ஒரு பகுதியாக மே 7-ம் தேதியான இன்று சென்னை மற்றும்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
மும்பை : ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் வேளையில், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெறுவதாக…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா ராணுவம் வெற்றிகரமாக தீவிரவாதிகள் முகாம்களை அழித்துள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர்…
கொல்கத்தா : ஐபிஎல் 2025-இன் 57-வது போட்டியில், நடப்பு சீசனில் லீக் சுற்றுடன் நடையை கட்டவுள்ள சென்னை மற்றும் பிளே…
டெல்லி : ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22, 2025 அன்று நடந்த பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக தகவல்…