கார்த்தி நடிப்பில் வரும் தீபாவளி அன்று கைதி திரைப்படம் வெளியாக உள்ளது. அதனை அடுத்து ரெமோ பட இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் புதிய படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் ரஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடிக்கிறார். இந்த படத்திற்கு தற்காலிகமாக சுல்தான் என தலைப்பிடப்பட்டிருந்தது.
தற்போது இப்பட ஷூட்டிங் திண்டுக்கல்லில் நடைபெற்றது. இந்நிலையில் நேற்று திண்டுக்கல்லில் உள்ள இந்து அமைப்பின்னர் இப்பட ஷூட்டிங் நடைபெறும் இடத்திற்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டனர். காரணம் இப்படம் சுல்தான் என தலைப்பிடப்பட்டு, குறிப்பிட்ட சமூகல்தினரை தூண்டிவிடும் வகையில் படம் எடுக்கப்படுகிறது. எனவும், இஸ்லாமியத்தை சேர்ந்த திப்பு சுல்தானின் வாழ்வை மையப்படுத்தி எடுக்கப்படுவதாகவும் இந்து அமைப்பினர் குற்றம் சாட்டினார்.
பின்னர், இப்பட ஷூட்டிங் நிறுத்தப்பட்டு, படக்குழு அவ்விடத்தில் இருந்து கிளம்பிவிட்டனர். இதனை தொடர்ந்து, படக்குழு சார்பாக வந்த தகவலின்படி, இந்த படம் வரலாற்று பின்னணி கொண்ட படம் அல்ல என தெரிவிக்கப்பட்டது. மேலும் மக்களுக்கு எதனை காண்பிக்க வேண்டும் எதனை காண்பிக்க கூடாது என தேர்வு செய்ய அரசின் சென்சார் குழு உள்ளது. அதே போல எதனை படமாக்கவேண்டுமே என சுதந்திரம் படைப்பாளிகளுக்கு இருக்கிறது. இப்படி இருக்க இடையில் சுய விளம்பரத்திற்கு சில அமைப்பில் இவ்வாறு போராட்டத்தில் ஈடுபடுவதை வன்மையாக கண்டிக்கிறோம் என படக்குழு தெரிவித்தது.
டெல்லி :நாடாளுமன்றத்தின் வரவிருக்கும் மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 21 முதல் ஆகஸ்ட் 21ம் தேதி வரை நடைபெறும், ஆகஸ்ட் 13…
சிவகங்கை : திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக காவலராகப் பணியாற்றிய அஜித்குமார் (27), நகை திருட்டு புகாரில்…
சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக,03-07-2025 முதல் 05-07-2025 வரை தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும்…
எட்ஜ்பாஸ்டன் : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பயிற்சியாளரும், முன்னாள் வீரரும், தற்போதைய வர்ணனையாளருமான ரவி சாஸ்திரி, இந்திய அணியின்…
சென்னை : விருதுநகர் மாவட்டத்தின் சாத்தூர் வட்டம், சின்னக்காமன்பட்டி கிராமத்தில் உள்ள தனியார் பட்டாசு ஆலையில் நேற்று காலை 8:30 மணியளவில்…
சென்னை : போதைப் பொருள் (கொக்கைன்) பயன்படுத்தியதாக கைது செய்யப்பட்ட நடிகர்கள் ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணா, ஜாமீன் கோரி சென்னை…