[Image Source : IANS]
கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 11-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு துணை தேர்வு நடத்த உயர்நீதிமன்றம் உத்தரவு.
தமிழ்நாட்டில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 11-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு துணை தேர்வு நடத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி, கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 11ம் வகுப்பு தேர்வில் ஒன்றுக்கும் மேற்பட்ட பாடங்களில் தோல்வியடைந்த மாணவர்களுக்கு 3 வாரங்களில் துணைத் தேர்வு நடத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப்பள்ளிகளில் ஒன்றுக்கும் மேற்பட்ட பாடங்களில் தோல்வி அடைந்தவர்கள் துணைத் தேர்வு எழுத அனுமதிப்பதில்லை என மாணவர்கள் சார்பில் வழக்கு தொடர்ந்த நிலையில், சென்னை உயர்நீதிமன்றம் இவ்வாறு ஆணையிட்டுள்ளது. ஒரு படத்தில் தோல்வி, ஒன்றுக்கு மேற்பட்ட பாடங்களில் தோல்வி அடைந்த மாணவர்களிடையே பாரபட்சம் காட்டுவதாக மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேறு பள்ளிகளில் சேர மாற்று சான்று வழங்குவதற்காகவே 2018ல் ஒரு மாணவிக்கு மட்டும் தேர்வு நடத்தப்பட்டது என்றும் ஒன்றுக்கு மேற்பட்ட பாடங்களில் தோல்வி அடைந்தவர்களுக்கு துணை தேர்வு எழுத அனுமதி இல்லை எனவும் பள்ளி நிர்வாகம் சார்பில் கூறியுள்ளனர். மாணவர்களின் எதிர்கால நலனைக் கருத்தில் கொண்டு, ஒரேயொரு முறை நடவடிக்கையாக துணைத்தேர்வு நடத்த வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் நீதிபதி தண்டபாணி கூறியுள்ளார்.
லீட்ஸ்: இந்திய கிரிக்கெட்டின் உருவாகி வரும் நட்சத்திரமான வைபவ் சூர்யவம்சி, இங்கிலாந்து அண்டர்-19 அணிக்கு எதிரான இளையோர் ஒருநாள் போட்டியில்…
வாஷிங்டன்: டொனால்ட் டிரம்பின் நெருங்கிய ஆதரவாளரும், மாகா இயக்கத்தின் முக்கிய பிரமுகருமான லாரா லூமர், எலான் மஸ்க் தொடங்கவுள்ள புதிய…
சிவகங்கை : மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவில் காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார், நகை திருட்டு வழக்கில் விசாரணைக்காக…
சென்னை: தமிழக வெற்றிக் கழகம் (தவெக), 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு 2 கோடி உறுப்பினர்களை சேர்க்கும் இலக்கை அடைய…
பர்மிங்காம்: இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் (ஜூலை 2-6, 2025, எட்ஜ்பாஸ்டன்), இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில்…
தூத்துக்குடி : சென்னை விமான நிலையத்தில் இருந்து தூத்துக்குடிக்கு ஜூலை 6, 2025 காலை 10:10 மணிக்கு புறப்பட இருந்த ஸ்பைஸ்ஜெட்…