கோடநாடு விவகாரம் தொடர்பாக கனகராஜின் உறவினரை 5 நாட்கள் விசாரிக்க உதகை நீதிமன்றம் அனுமதி.
கோடநாடு கொலை,கொள்ளை தொடர்பான வழக்கு இன்று உதகை நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.இதில்,முதன்மை குற்றவாளியான சயான்,வாளையாறு மனோஜ் உள்ளிட்டோர் இன்று நீதிமன்றத்தில் ஆஜரானார்கள்.இந்த வழக்கு விசாரணையின்போது,காவல்துறையினர் கூடுதல் விசாரணைக்கு காலஅவகாசம் கேட்டனர். இதனையடுத்து,வழக்கு அடுத்த மாதம் 26 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
இந்நிலையில்,கோடநாடு கொலை,கொள்ளை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு உயிரிழந்த கார் ஓட்டுனர் கனகராஜின் உறவினர் ரமேஷ் என்பவரை 5 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
கோடநாடு சம்பவம் தொடர்பாக கனகராஜ் சகோதரர் தனபாலை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க நேற்று நீதிமன்றம் அனுமதி வழங்கிய நிலையில்,ரமேஷ் என்பவரையும் காவலில் எடுத்து விசாரிக்க காவல்துறையினர் 10 நாட்கள் காலஅவகாசம் கேட்ட நிலையில்,5 நாட்கள் மட்டும் விசாரிக்க உதகை நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
மதுரை : மாவட்டத்தில் ஜூன் 22, 2025 அன்று நடைபெறவுள்ள முருக பக்தர்கள் மாநாடு (முருக பக்தர்களின் ஆன்மிக மாநாடு)…
லீட்ஸ் : இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஜூன் 20, 2025 அன்று லீட்ஸ்…
சென்னை : சென்னையைச் சேர்ந்த மூத்த குடிமக்களுக்கான கட்டணமில்லா பேருந்து பயண டோக்கன் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் அடுத்த…
பாரிஸ் : இந்தியாவின் முன்னணி ஈட்டி எறிதல் வீரரான நீரஜ் சோப்ரா, ஜூன் 20, 2025 அன்று பாரிஸில் நடைபெற்ற…
ஆந்திர பிரதேசம்: சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, சிறப்பு யோகா தபால் தலையை பிரதமர் மோடி வெளியிட்டுள்ளார். ஆந்திர பிரதேசத்தின்…
ரெஹோவோட் : ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே நடந்து வரும் போருக்கு முடிவே இல்லை என்று தெரிகிறது. ஈரானின் அணுசக்தி தளங்கள்,…