Kodanad Case : கோடநாடு கொலை – கொள்ளை வழக்கில் இன்னும் கால அவகாசம் தேவை.! நீதிமன்றத்தில் சிபிசிஐடி கோரிக்கை.!

Published by
மணிகண்டன்

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கோடநாடு பங்களாவில் கடந்த 2017 ஏப்ரல் மாதம் 24-ஆம் தேதி காவலாளி ஓம் பகதூர், 11 பேர் கொண்ட கும்பலால் கொலை செய்யப்பட்டு, அங்கிருந்த முக்கிய ஆவணங்கள் கொள்ளையடிக்கப்பட்டன.

இந்த கும்பலில் முக்கிய குற்றவாளியான கனகராஜ் அதே ஏப்ரல் மாதம் சாலை விபத்தில் உயிரிழந்தார். காவலாளி கொலை  அதன் பிறகான கனகராஜ் கொலை, முக்கிய ஆவணங்கள் கொள்ளை என மிகவும் பரபரப்பான சம்பவங்கள் நிகழ்ந்த இந்த வழக்கை தமிழக காவல்துறையினர் விசாரித்து வந்தனர்.

கோடநாடு வழக்கில் இதுவரை சுமார் 230 பேரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். இவ்வழக்கில் 12 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு விசாரணை கடந்த 5 வருடங்களாக நீலகிரி மாவட்டம் உதகை முதன்மை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இதனை அடுத்து காவல்துறை விசாரித்து வந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. தற்போது சிபிசிஐடி தொடர் விசாரணையை மேற்கொண்டு வருகிறது.

இதனை அடுத்து சிபிசிஐடி போலீசார் விசாரணை செய்து வரும் நிலையில், இன்று நீதிமன்றத்தில் இடைக்கால விசாரணை அறிக்கையை சிபிசிஐடி போலீசார் தாக்கல் செய்துள்ளனர்.  தாக்கல் செய்யப்பட்ட விசாரணை அறிக்கையில் இதுவரை 167 சாட்சியத்திடம் விசாரணை நடத்தபட்டுள்ளது. இன்னும் பலரிடம் விசாரிக்கப்பட வேண்டியுள்ளது என்றும், செல்போன் தகவல்கள் போன்றவற்றை விசாரணை செய்ய வேண்டியுள்ளது என கூடுதல் அவகாசம் வேண்டும் என கோரப்பட்டது.

இதனை அடுத்து, உதகை முதன்மை நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணையானது அக்டோபர் 13ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

Published by
மணிகண்டன்

Recent Posts

அச்சப்படாதீங்க மக்களே வெளியே வாங்க…தைரியம் கொடுத்த ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா!

டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் ​​மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…

5 hours ago

விராட் கோலி ஓய்வு: ‘அந்தக் கண்ணீரை நான் நினைவில் கொள்வேன்’ – அனுஷ்கா சர்மாவின் உருக்கமான பதிவு.!

மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…

5 hours ago

மே 30 இறுதிப்போட்டி? மீண்டும் ஐபிஎல்லை தொடங்க திட்டம் போட்ட பிசிசிஐ!

டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…

6 hours ago

5 நாள் பயணமாக உதகை சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!

ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…

7 hours ago

”நெருங்கவே முடியாது.., அனைத்து ராணுவ பிரிவுகளும் தயார் நிலையில் உள்ளன” – துணை அட்மிரல் ஏ.என். பிரமோத்.!

டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…

7 hours ago

“எங்களின் இலக்கு பயங்கரவாதிகள் தான்” இந்திய ஏர் மார்ஷல் பார்தி பேச்சு!

டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…

7 hours ago