கோடநாடு கொலை வழக்கு.., விவேக் ஜெயராமனிடம் 3 மணி நேரம் விசாரணை..!

Published by
murugan

தனிப்படை 3 மணி நேரம் விசாரணை நடத்திய நிலையில், விசாரணை முடிந்து விவேக் ஜெயராமன் வெளியேறினார்.

ஜெயலலிதா மரணத்திற்கு பிறகு கடந்த 2017-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 24 ஆம் தேதி 11 பேர் கொண்ட கும்பல் கோடநாடு பங்களாவில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டனர்.  அப்போது காவலாளி ஓம்பகதூர் கொலை செய்யப்பட்டார். கொடநாடு கொலை வழக்கில் பெரிதாக முன்னேற்றம் இல்லாமல் இருந்த நிலையில் கடந்த ஆகஸ்ட் 13-ஆம் தேதி தமிழக அரசு தரப்பில் கொடநாடு வழக்கை மறுவிசாரணை செய்யவேண்டும் என தொடரப்பட்ட மனுவுக்கு உதகை நீதிமன்றம் அனுமதி வழங்கியது.

இதனையடுத்து மீண்டும் இந்த வழக்கு விசாரணையை காவல்துறையினர் தொடங்கியுள்ளனர். இந்நிலையில், கோவையில் வைத்து சசிகலாவின் அண்ணன் மகனும், இளவரசியின் மகனுமான விவேக் ஜெயராமனிடம் கோநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர்.

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் முதல் முறையாக விவேக் ஜெயராமனிடம் விசாரணை நடைபெற்றது. கோடநாடு பங்களா மேலாளரிடம் ஏற்கனவே விசாரணை நடத்தப்பட்ட நிலையில் விவேக் ஜெயராமனிடம் விசாரணை நடத்தப்பட்டது. கோவை காவலர் பயிற்சி பள்ளி வளாகத்தில் சசிகலா அண்ணன் மகன் விவேக்கிடம் தனிப்படை 3 மணி நேரம் விசாரணை நடத்திய நிலையில், விசாரணை முடிந்து  விவேக் ஜெயராமன் வெளியேறினார்.

Published by
murugan

Recent Posts

கொல்கத்தா கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: நான்கு பேர் கைது.., சிறப்பு விசாரணை குழு அமைப்பு.!

கொல்கத்தா கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: நான்கு பேர் கைது.., சிறப்பு விசாரணை குழு அமைப்பு.!

கொல்கத்தா : மேற்கு வங்காளத்தில் உள்ள ஒரு சட்டக் கல்லூரியில் மாணவி ஒருவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகக் கூறப்படும்…

6 hours ago

”தமிழக மீனவர்களை மீட்க” – அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்.!

சென்னை : நேற்று கச்சத்தீவு அருகே ராமேஸ்வரம் மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி…

6 hours ago

போலீஸ் காவலில் மரணம்.., காவலர்கள் மீது வழக்குப்பதிவு செய்க – தவெக.!

சென்னை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்தில் அஜித் என்ற இளைஞரின் மரணம் தொடர்பாக, ஆறு காவலர்கள் இடைநீக்கம்…

7 hours ago

போலீஸ் காவலில் மரணம்.., ஜெய்பீம் படம் பார்த்த முதல்வர் எங்கே? – எடப்பாடி பழனிசாமி விமர்சனம்.!

சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்திற்கு நகை திருடியதாக கூறி விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட இளைஞர் அஜித்…

7 hours ago

பூரி ரத யாத்திரை கூட்ட நெரிசலில் 3 பேர் உயிரிழப்பு.., ரூ.25 லட்சம் நிவாரணம்.!

ஒடிசா : ஒடிசா மாநிலம் பூரியில் உள்ள ஒரு கோயில் அருகே ஏற்பட்ட கூட்ட நெரிசலுக்கு ஒடிசா முதல்வர் மோகன்…

8 hours ago

”மின் கட்டண உயர்வு குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம்” – அமைச்சர் சிவசங்கர்.!

சென்னை : தமிகத்தில் வீட்டு மின் இணைப்புகளுக்கு எந்தவித மின்கட்டண உயர்வும் இல்லை என அமைச்சர் சிவசங்கர் விளக்கம் அளித்துள்ளார்.…

10 hours ago