CrackerGoodownFire [Image Source : Twitter/@sunnewstamil]
கிருஷ்ணகிரி பட்டாசு கிடங்கு வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் பழைய பேட்டையில் உள்ள தனியார் பட்டாசு குடோனில் இன்று காலை வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது. இந்த வெடி விபத்தில் இதுவரை 4 பேர் உயிரிழந்திருந்த நிலையில், பலி எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது. மேலும், 10க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.
இதன்பின், தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத் துறையினர் தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். பட்டாசுகள் வெடித்து சிதறியதில் குடோன் உட்பட மூன்றுக்கும் மேற்பட்ட வீடுகள் முற்றிலும் சேதமடைந்துள்ளன.
மேலும், விபத்தில் காயமடைந்தவர்கள் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து ஏற்பட்ட பகுதியில் இருக்கும் உணவகம் சேதமடைந்துள்ளதாவும், அதில் சிலர் சிக்கியிருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.
எனவே, சேதமடைந்த கட்டிடங்களை ஜேசிபி மூலம் அப்புறப்படுத்தும் பணியும், சிக்கியவர்களை மீட்கும் பணியும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் சரயு மற்றும் காவல் கண்காணிப்பாளர் சரோஜ் குமார் நேரில் சென்று ஆய்வு நடத்தி வருகின்றனர்.
டெல்லி : ஐபிஎல் தொடரில் புதிய வீரர்களை இணைக்க பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது. ஐபிஎல் தொடர் ஒரு வாரம் ஒத்திவைக்கப்பட்டதால்…
டெல்லி : மத்தியப் பிரதேச அமைச்சர் குன்வர் விஜய் ஷாவின் சகோதரி கர்னல் சோபியா குரேஷிக்கு எதிராக பயங்கரவாதிகளின் கருத்தை…
சென்னை : வக்ஃப் மசோதா வழக்கில் நீதிமன்றத்தின் இடைக்கால நடவடிக்கையில் தவெக முக்கிய பங்காற்றியது என்றும், சிறுபான்மையினர் உரிமைகளை காக்கும்…
ஒடிசா : இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட் ''பார்கவஸ்த்ரா'' ஒடிசாவின் கோபால்பூரில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. குறைந்த செலவில் SDAL நிறுவனம்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…