Kiruthika Udhayanidhi [Image source : The Week]
உதயநிதி அறக்கட்டளை சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளது குறித்து வெளியான செய்திகள் பற்றி கிருத்திகா உதயநிதி தனது டிவிட்டர் பக்கத்தில் நகைச்சுவையாக மறுப்பு தெரிவித்துள்ளார்.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் அமலாக்கத்துறையினர் லைகா நிறுவனம் மற்றும் கல்லல் அறக்கட்டளை அலுவலகங்களில் சோதனைகளை மேற்கொண்டனர். இந்த சோதனையில் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை நடைபெற்றதாக தெரியவந்ததை அடுத்து அமலாக்கத்துறையினர் விசாரணையை தீவிரப்படுத்தினர்.
அப்போது கல்லல் அறக்கட்டளைக்கும், உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளைக்கும் பணப்பரிவர்த்தனை நடைபெற்றதாகவும், அதனால் இரு அறக்கட்டளை சொத்துக்களையும் முடக்கியதாக அமலாக்கத்துறை தங்கள் அதிகாரபூர்வ டிவிட்டர் கணக்கில் இருந்து பதிவிட்டன.
இது குறித்து பல்வேறு செய்திகளில் உதயநிதி அறக்கட்டளையின் தலைமை அதிகாரி கிருத்திகா உதயநிதி என பதிவிட்டு செய்திகள் வெளியிட்டு இருந்தனர்.
இதனை அடுத்து தற்போது தனது டிவிட்டர் பக்கத்தில் கிருத்திகா உதயநிதி பதிவிடுகையில், போலி செய்திகளை பரப்புவோர் . குறைந்தபட்சம் எனது புகைப்படத்தையாவது நன்றாக வைத்து விடுங்கள் என கிண்டலாக அந்த செய்திகளை மறுத்துள்ளார். மனைவி கிருத்திகா உதயநிதியின் டிவிட்டர் பதிவை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ரிடிவீட் செய்து சிரிக்கும் பதிவை இட்டுள்ளார்.
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…
வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…
காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…