Kiruthika Udhayanidhi [Image source : The Week]
உதயநிதி அறக்கட்டளை சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளது குறித்து வெளியான செய்திகள் பற்றி கிருத்திகா உதயநிதி தனது டிவிட்டர் பக்கத்தில் நகைச்சுவையாக மறுப்பு தெரிவித்துள்ளார்.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் அமலாக்கத்துறையினர் லைகா நிறுவனம் மற்றும் கல்லல் அறக்கட்டளை அலுவலகங்களில் சோதனைகளை மேற்கொண்டனர். இந்த சோதனையில் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை நடைபெற்றதாக தெரியவந்ததை அடுத்து அமலாக்கத்துறையினர் விசாரணையை தீவிரப்படுத்தினர்.
அப்போது கல்லல் அறக்கட்டளைக்கும், உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளைக்கும் பணப்பரிவர்த்தனை நடைபெற்றதாகவும், அதனால் இரு அறக்கட்டளை சொத்துக்களையும் முடக்கியதாக அமலாக்கத்துறை தங்கள் அதிகாரபூர்வ டிவிட்டர் கணக்கில் இருந்து பதிவிட்டன.
இது குறித்து பல்வேறு செய்திகளில் உதயநிதி அறக்கட்டளையின் தலைமை அதிகாரி கிருத்திகா உதயநிதி என பதிவிட்டு செய்திகள் வெளியிட்டு இருந்தனர்.
இதனை அடுத்து தற்போது தனது டிவிட்டர் பக்கத்தில் கிருத்திகா உதயநிதி பதிவிடுகையில், போலி செய்திகளை பரப்புவோர் . குறைந்தபட்சம் எனது புகைப்படத்தையாவது நன்றாக வைத்து விடுங்கள் என கிண்டலாக அந்த செய்திகளை மறுத்துள்ளார். மனைவி கிருத்திகா உதயநிதியின் டிவிட்டர் பதிவை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ரிடிவீட் செய்து சிரிக்கும் பதிவை இட்டுள்ளார்.
டெல்லி : தங்கக் கடத்தல் மற்றும் பணமோசடி வழக்கு தொடர்பாக கன்னட நடிகை ரன்யா ராவுக்குச் சொந்தமான ரூ.34.12 கோடி…
பர்மிங்காம் : இந்திய அணிக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்று வருகிறது. ஷுப்மான் கில்லின் இரட்டை சதத்தால்…
பொள்ளாச்சி : பொள்ளாச்சியைச் சேர்ந்த குருதீப் என்ற 10ஆம் வகுப்பு மாணவர், தனியார் பள்ளியில் பயின்று வந்த நிலையில், 2025ஆம்…
காரைக்கால் : மயிலாடுதுறை அருகே தமிழக வாழ்வுரிமை கட்சியின் காரைக்கால் மாவட்ட நிர்வாகி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை…
பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் இந்திய அணி 587 ரன்களை குவித்துள்ளது. இந்திய அணிக்கு தூணாக நின்று…
சென்னை : திருப்புவனம் இளைஞர் மரணத்தை கண்டித்து நாளை (ஜூலை 3, 2025) எழும்பூர், ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற இருந்த…