இந்து சமய அறநிலைய துறைக்கு எச்சரிக்கை விடுத்த தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர்.!

Published by
பாலா கலியமூர்த்தி
  • தஞ்சை பிரகதீஸ்வரர் கோயில் குடமுழுக்கு தமிழில் தான் முறைப்படி நடத்த வேண்டும் என்று திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட அரசியல் கட்சிளும், பல தமிழ் அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றனர்.
  • அந்த வகையில், தமிழில் குடமுழுக்கு நடத்தப்படவில்லை என்றால், இந்து சமய அறநிலைய துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம் என தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.

தஞ்சை பிரகதீஸ்வரர் கோயில் குடமுழுக்கு ஆனது 23 வருடங்களுக்கு பிறகு பிப் 5-ம் தேதி கோலகலமாக நடைபெறவுள்ளது. இந்நிலையில், குடமுழுக்கு தமிழில் தான் முறைப்படி நடத்த வேண்டும் என்று திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட அரசியல் கட்சிளும், பல தமிழ் அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றனர். தொடர்ந்து கோவிலில் குடமுழுக்க ஆனது தமிழில் முறைப்படி நடத்த உத்தரவிடக் கோரி, ராமநாதபுர மாவட்டத்தைச் சேர்ந்த திருமுருகன் என்பவர் சென்னை உயர்நீதிமன்ற, மதுரை கிளையில் வழக்கு ஒன்றினை தொடர்ந்தார். இந்த வழக்கு மீதான விசாரனையில், தஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கு ஆனது ஆகம விதிகளின்படியே நடத்தப்படும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து, தஞ்சை பிரகதீஸ்வரர் ஆலய நிர்வாகத்தினரை எதிர் மனுதாரராக சேர்க்க உத்தரவிட்ட நீதிபதிகள் விசாரணையை வரும் 27-ம் தேதி ஒத்திவைத்தனர். இதனால் பல அமையினரும் தொடர்ந்து கண்டம் தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில், தஞ்சை பெரிய கோயிலில் தமிழில் குடமுழுக்கு நடத்தப்படவில்லை என்றால், இந்து சமய அறநிலைய துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம் என தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.

தஞ்சையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஹைட்ரோ-கார்பன் திட்டத்தை அமல்படுத்துவது ஜனநாயகத்திற்கு எதிரானது எனக் கூறினார். எனவே, இந்த திட்டத்தை மத்திய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் எனவும், இதற்கு தமிழக அரசு அழுத்தம் தர வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார். குடியுரிமை திருத்த சட்டம், ஹைட்ரோ-கார்பன், பொதுத்தேர்வு பிரச்சினைகளை திசை திருப்பும் வகையில் நடிகர் ரஜினி காந்த், தற்பொழுது பெரியார் குறித்து பேசி வருவதாக வேல்முருகன் குற்றம்சாட்டினார்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

இன்று 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…வானிலை மையம் தகவல்!

தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒருவளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது இதன் காரணமாக இன்று 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…

3 minutes ago

பா.ம.க.வில் நெருக்கடியான சூழல் உருவாகி உள்ளது…உண்மையை உடைத்த ஜி.கே. மணி!

சென்னை : தமிழகத்தில் 2026 சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வருவதால், அரசியல் களம் இப்போதே சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. தேர்தல்…

1 hour ago

பெங்களூர் vs கொல்கத்தா போட்டியில் மழை வந்தால் அவ்வளவு தான்…எந்த அணி வெளியேறும் தெரியுமா?

பெங்களூர் : ஐபிஎல் 2025 சீசனின் லீக் கட்டம் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், மே 17, 2025 அன்று பெங்களூருவில்…

2 hours ago

குடும்பத்துக்குள்ளேயே வெட்டு குத்து…எப்படி 50 தொகுதிகளை ஜெயிப்பாங்க? ராமதாஸை விமர்சித்த சேகர் பாபு!

சென்னை : நேற்று விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் தைலாபுரத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் மாவட்ட தலைவர்கள் மற்றும் செயலாளர்களுக்கான…

3 hours ago

என்னோட கணவரை 21 நாள் தூங்கவிடல..பாக் செய்த சித்ரவதை…பூர்ணம் குமார் மனைவி சொன்ன தகவல்!

டெல்லி : இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே நடந்த போர் ஒரு வழியாக நின்ற நிலையில் பதற்றம் நாடுகளின்…

4 hours ago

கோர விபத்து…வேன் மீது மோதிய ஆம்னி பேருந்து..4 பேர் பலி!!

கரூர் : மாவட்டம், செம்மடை அருகே நடந்த பயங்கர விபத்தில், 4 பேர் உயிரிழந்த சம்பவம் காலையிலே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.…

6 hours ago