Minister KKSSR Ramachandran [File Image]
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி கடந்த மாதத்தை விட இந்த மாத தொடக்கத்தில் இருந்து பல்வேறு மாவட்டங்களில் இடி மின்னலுடன் மிதமானது முதல் கனமழை வரை பெய்து வருகிறது.இதனால் பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்குவதும், அதனை சரி செய்யும் வேலைகளும் நடைபெற்று வருகின்றன.
இந்த வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தமிழக அரசால் மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் இன்று செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தார்.
Rain Alert: தமிழ்நாட்டில் இன்று 12 மாவட்டங்களில் கனமழை!
அவர் கூறுகையில், கடந்த 21.10.2023 முதல் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை துவங்கியுள்ளது. இதனை எதிர்கொள்ள தமிழக முதல்வரின் உத்தரவின்படி, கடந்த 19.09.2023ஆம் தேதி தலைமை செயலகத்தில் ஆய்வு கூட்டம் நடத்தினோம். அதே போல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தலைமை செயலாளர் தலைமையில் அரசு அதிகாரிகளும் ஆலோசனை மேற்கொண்டனர்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு வேண்டிய பணிகளை தயார் செய்து வருகிறோம். கடந்த மாதத்தை பொறுத்தவரையில் 43 சதவீதம் குறைவாக மழை பெய்துள்ளது. நாளை உள் மாவட்டங்களிலும், இன்று கடற்கரை மாவட்டங்களிலும் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
பேரிடர் பணிக்காக 400 பேர் தயார் நிலையில் இருக்கிறார்கள். எங்கே தேவை இருக்கிறதோ அங்கே உடனடியாக வீரர்கள் அனுப்பிவைக்கப்படுவர். இந்த மழையை எதிர்பார்த்து அரசு தயார் நிலையில் இருக்கிறது. மழைநீர் தேங்குவதை தடுக்க இரவு பகல் பாராமல் மாநகராட்சி ஊழியர்கள் வேலை செய்து வருகிறார்கள்.
உள்ளாட்சி துறை அமைச்சர் கே.என்.நேரு அவர்களும் மழைநீர் வடிகால் பணிகளை கண்காணித்து வருகிறார்கள். எதிர்பார்த்த அளவை விட மழையின் அளவு குறைவாக பெய்து வருகிறது.
சென்னையில் மட்டும் 15 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறோம். 22 சுரங்க பாதையை கண்காணித்து வருகிறோம் . 169 நிவாரண முகாம்கள் தயார் நிலையில் உள்ளது. 260 ராட்சச பம்புகள் தயார் நிலையில் உள்ளது. கடலோரே மாவட்டங்களில் மீனவர்களுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பற்றி தகவல் கூறியுள்ளோம் என பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தகவல் கூறியுள்ளார்.
லீட்ஸ்: இந்திய கிரிக்கெட்டின் உருவாகி வரும் நட்சத்திரமான வைபவ் சூர்யவம்சி, இங்கிலாந்து அண்டர்-19 அணிக்கு எதிரான இளையோர் ஒருநாள் போட்டியில்…
வாஷிங்டன்: டொனால்ட் டிரம்பின் நெருங்கிய ஆதரவாளரும், மாகா இயக்கத்தின் முக்கிய பிரமுகருமான லாரா லூமர், எலான் மஸ்க் தொடங்கவுள்ள புதிய…
சிவகங்கை : மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவில் காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார், நகை திருட்டு வழக்கில் விசாரணைக்காக…
சென்னை: தமிழக வெற்றிக் கழகம் (தவெக), 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு 2 கோடி உறுப்பினர்களை சேர்க்கும் இலக்கை அடைய…
பர்மிங்காம்: இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் (ஜூலை 2-6, 2025, எட்ஜ்பாஸ்டன்), இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில்…
தூத்துக்குடி : சென்னை விமான நிலையத்தில் இருந்து தூத்துக்குடிக்கு ஜூலை 6, 2025 காலை 10:10 மணிக்கு புறப்பட இருந்த ஸ்பைஸ்ஜெட்…