எதிர்பார்த்த அளவை விட குறைவான மழை.! அமைச்சர் K.K.S.S.R.ராமச்சந்திரன் பேட்டி.!

Published by
மணிகண்டன்

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி கடந்த மாதத்தை விட இந்த மாத தொடக்கத்தில் இருந்து பல்வேறு மாவட்டங்களில் இடி மின்னலுடன் மிதமானது முதல் கனமழை வரை பெய்து வருகிறது.இதனால் பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்குவதும், அதனை சரி செய்யும் வேலைகளும் நடைபெற்று வருகின்றன.

இந்த வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தமிழக அரசால் மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் இன்று செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தார்.

Rain Alert: தமிழ்நாட்டில் இன்று 12 மாவட்டங்களில் கனமழை!

அவர் கூறுகையில், கடந்த 21.10.2023 முதல் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை துவங்கியுள்ளது. இதனை எதிர்கொள்ள தமிழக முதல்வரின் உத்தரவின்படி, கடந்த 19.09.2023ஆம் தேதி தலைமை செயலகத்தில் ஆய்வு கூட்டம் நடத்தினோம். அதே போல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தலைமை செயலாளர் தலைமையில் அரசு அதிகாரிகளும் ஆலோசனை மேற்கொண்டனர்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு வேண்டிய பணிகளை தயார் செய்து வருகிறோம். கடந்த மாதத்தை பொறுத்தவரையில் 43 சதவீதம் குறைவாக மழை பெய்துள்ளது. நாளை உள் மாவட்டங்களிலும், இன்று கடற்கரை மாவட்டங்களிலும் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

பேரிடர் பணிக்காக 400 பேர் தயார் நிலையில் இருக்கிறார்கள். எங்கே தேவை இருக்கிறதோ அங்கே உடனடியாக வீரர்கள் அனுப்பிவைக்கப்படுவர். இந்த மழையை எதிர்பார்த்து அரசு தயார் நிலையில் இருக்கிறது. மழைநீர் தேங்குவதை தடுக்க இரவு பகல் பாராமல் மாநகராட்சி ஊழியர்கள் வேலை செய்து வருகிறார்கள்.

உள்ளாட்சி துறை அமைச்சர் கே.என்.நேரு அவர்களும் மழைநீர் வடிகால் பணிகளை கண்காணித்து வருகிறார்கள். எதிர்பார்த்த அளவை விட மழையின் அளவு குறைவாக பெய்து வருகிறது.

சென்னையில் மட்டும் 15 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறோம். 22 சுரங்க பாதையை கண்காணித்து வருகிறோம் . 169 நிவாரண முகாம்கள் தயார் நிலையில் உள்ளது. 260 ராட்சச பம்புகள் தயார் நிலையில் உள்ளது. கடலோரே மாவட்டங்களில் மீனவர்களுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பற்றி தகவல் கூறியுள்ளோம் என பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தகவல் கூறியுள்ளார்.

Published by
மணிகண்டன்

Recent Posts

ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!

சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…

2 hours ago

பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுங்க…முழு உத்தரவு கொடுத்த பிரதமர் மோடி!

டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…

3 hours ago

வலிமையுடன் போரை கையாண்ட மோடிக்கு எனது பாராட்டுகள்- ரஜினிகாந்த் பேச்சு!

சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…

4 hours ago

தீவிரவாதிகள் தான் டார்கெட்…பொதுமக்கள் இல்லைங்க! பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம்!

லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…

4 hours ago

ஆப்ரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை…இந்திய விமானப் படை கொடுத்த விளக்கம்!

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

6 hours ago

போர் நிறுத்தியாச்சு வாங்க…சொந்த ஊர் திரும்பிய வீரர்களை மீண்டும் அழைக்கும் அணி நிர்வாகங்கள்?

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

7 hours ago