தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் மாற்றப்பட்டதால் தமிழகத்திற்கு விமோசனம் பிறந்து இருக்கின்றது என்றுதான் கருதுகிறேன் என வைகோ கூறியுள்ளார்.
நாகாலாந்து ஆளுநராக ரவீந்திர நாராயண ரவி பணியாற்றி வந்த நிலையில், தமிழகத்தின் புதிய ஆளுநராக ஆர்.என்.ரவி நியமித்து குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவு பிறப்பித்தார். தமிழக ஆளுநராக இருந்த பன்வாரிலால் புரோஹித் பஞ்சாப் மாநில ஆளுநராக கூடுதல் பொறுப்பு வகித்த நிலையில் தற்போது முழுநேர ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், நெல்லையில் செய்தியாளர்களிடம் பேசிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் மாற்றப்பட்டதால் தமிழகத்திற்கு விமோசனம் பிறந்து இருக்கின்றது என்றுதான் கருதுகிறேன். எனவே தமிழ்நாட்டின் புதிய ஆளுநர் வரம்பிற்கு உட்பட்டு செயல்பட வேண்டும். பெரியார், அண்ணாவின் எண்ணத்தை நிறைவேற்றும் அரசாக திமுக செயல்படுகிறது. எவரின் மனதையும் புண்படுத்தாமல் அரசு செயல்பட்டு வருகிறது என தெரிவித்தார்.
லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட், இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் (ஜூன்…
மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது இதன் காரணமாக…
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…
சென்னை : 2025 நீட் (NEET-UG) தேர்வு முறைகேடு தொடர்பாக மத்திய புலனாய்வு அமைப்பு (CBI) மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஒரு…
ரஷ்யா : இஸ்ரேல் vs ஈரான் இடையே 11-வது நாளாக கடுமையாக போர் நடைபெற்று வருகிறது. இந்த போர் எப்போது முடிவுக்கு…
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…