நேற்றே 250 கோடிக்கு மது விற்பனை தமிழகத்தில் நடந்துள்ளதால் வாழ்க குடி மக்கள் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், கடந்த சில மாதங்களாக மூடப்பட்டிருந்த டாஸ்மாக் கடைகள் அண்மையில் திறக்கப்பட்டு பல கோடிக்கணக்கில் விற்பனை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தமிழகம் முழுவதிலும் ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனவே வீட்டிலுள்ள பெண்கள் எப்படி ஞாயிற்றுக்கிழமைக்கு தேவையான பொருள்களை சனிக்கிழமை இரவே வாங்கி வைக்கிறார்களோ, அதுபோலவே ஞாயிற்றுக்கிழமைக்கு தேவையான சரக்குகளை மதுபான பிரியர்கள் சனிக்கிழமை வாங்கி வைத்துவிடுகிறார்கள்.
இந்நிலையில் தற்போது பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில். வாழ்க குடிமக்கள் தமிழ்நாட்டில் நேற்று ஒரே நாளில் 250 கோடிக்கு மது விற்பனை நடைபெற்றுள்ளது. இன்று முழு ஊரடங்கு என்பதால் குடிமக்கள் நேற்றே போட்டி போட்டு மது வாங்கியதால் விற்பனை அதிகரிக்கப்பட்டுள்ளது. வாழ்க குடிமக்கள்! வளர்க தமிழ் நாடு! என ட்விட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். இதோ அந்த பதிவு,
அமெரிக்கா : சர்வேதேச விண்வெளி மையத்துக்கு செல்வதற்காக ஆக்சியம் எனும் தனியார் நிறுவனம் இஸ்ரோ மற்றும் நாசாவுடன் இணைந்து 'ஆக்சியம்…
சென்னை : மதுரையில் கடந்த ஜூன் 22ம் தேதி பாஜக மற்றும் இந்து முன்னணி அமைப்பால் நடத்தப்பட்ட முருகன் பக்தர்கள்…
திருப்பூர் : இந்து முன்னணி அமைப்பின் திருப்பூர் வடக்கு ஒன்றியத் தலைவராக இருந்த பாலமுருகன் என்பவர் பைனான்ஸ் நிறுவனம் நடத்திவந்த…
சென்னை : இயக்குநர் லியோ ஜான் பால் இயக்கத்தில் நடிகர் விஜய் ஆண்டனி நடிக்கும் ''மார்கன்'' திரைபடம் ஜூன் 27…
லீட்ஸ் : முதல் டெஸ்டின் இரண்டு இன்னிங்ஸ்களிலும் இந்திய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் சதம் அடித்தார். அற்புதமான…
அமெரிக்கா : இன்று (ஜூன் 25, 2025) இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா உட்பட நான்கு பேர் ஆக்சியம்-4…