SG Suriyah BJP [Image source : Twitter/@SuryahSG]
மதுரை எம்பி சு.வெங்கடேசன் குறித்து அவதூறு பரப்பிய வழக்கில், எஸ்.ஜி.சூர்யாவுக்கு மதுரை மாவட்ட நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.
மதுரை எம்பி சு.வெங்கடேசன் குறித்து அவதூறு பரப்பிய புகாரில் தமிழ்நாடு பாஜக மாநில செயலாளர் எஸ்.ஜி.சூர்யாவை கடந்த 17- ஆம் தேதி இரவு சென்னையில் உள்ள அவரது வீட்டில் மதுரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
பின்னர், மதுரைக்கு அழைத்து வந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுத்தப்பட்ட எஸ்.ஜி சூர்யாவிற்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் எனும் உத்தரவு பிறப்பித்து மதுரை விரைவு நீதிமன்றம்.இதற்கிடையில், எஸ்.ஜி.சூர்யா கைதுக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, பாஜக நிர்வாகிகள் தொடர்ந்து தங்கள் எதிர்ப்பை தெரிவித்து வந்தனர்.
இந்த நிலையில், மதுரை மத்திய சிறையில் உள்ள பாஜக மாநில செயலாளர் எஸ்ஜி சூர்யா தரப்பில் இந்த அவதூறு வழக்கில் ஜாமீன் கோரி மதுரை நீதித்துறை நடுவர் மன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுமீதான விசாரணையில் மதுரை மாவட்ட நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.
டெல்லி : ஐபிஎல் தொடரில் புதிய வீரர்களை இணைக்க பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது. ஐபிஎல் தொடர் ஒரு வாரம் ஒத்திவைக்கப்பட்டதால்…
டெல்லி : மத்தியப் பிரதேச அமைச்சர் குன்வர் விஜய் ஷாவின் சகோதரி கர்னல் சோபியா குரேஷிக்கு எதிராக பயங்கரவாதிகளின் கருத்தை…
சென்னை : வக்ஃப் மசோதா வழக்கில் நீதிமன்றத்தின் இடைக்கால நடவடிக்கையில் தவெக முக்கிய பங்காற்றியது என்றும், சிறுபான்மையினர் உரிமைகளை காக்கும்…
ஒடிசா : இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட் ''பார்கவஸ்த்ரா'' ஒடிசாவின் கோபால்பூரில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. குறைந்த செலவில் SDAL நிறுவனம்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…