[Image source : Twitter/@SuVe4Madurai]
சித்த மருத்துவ பல்கலைக்கழக மசோதா நிறுத்தி வைக்கப்பட்டு இருப்பது குறித்து மதுரை எம்பி சு.வெங்கடேசன் டிவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.
அண்மையில், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தனியார் செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்து இருந்தார். அதில், திராவிட மாடல் காலாவதியான ஐடியா, சித்த மருத்துவ கல்லூரி பல்கலைக்கழக மசோதா நிறுத்திவைப்பு, சிதம்பரம் தீட்சிதர்கள் விவகாரம் என பல்வேறு விவகாரங்கள் குறித்து தனது கருத்தை வெளியிட்டு இருந்தார். இந்த கருத்துக்கள் தமிழக அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை உண்டு செய்து வருகின்றன.
சித்த மருத்துவகல்லூரி பற்றிய சட்ட மசோதா நிறுத்தி வைக்கப்பட்டு இருப்பது தொடர்பாக பேசிய ஆளுநர், சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகத்தில் துணை வேந்தரக மாநில முதல்வர்கள் இருக்கும்படி சட்ட மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ளது என்றும், கல்வித்துறையில் அரசியல் இருக்க கூடாது என்பதால் இது சரியாக இருக்காது என மசோதா நிறுத்தி வைக்கப்பட்டு இருப்பதாக ஆளுநர் தெரிவித்தார்.
ஆளுநர் ரவியின் இந்த கருத்துக்கு பதில் அளிக்கும் வகையில் பேசிய மதுரை எம்பி சு.வெங்கடேசன், தனது டிவிட்டர் பக்கத்தில், உத்திர பிரதேசத்தில் இரு பல்கலைக்கழகங்களுக்கு அம்மாநில முதல்வர் துணைவேந்தராக உள்ளார். என குறிப்பிட்டு, தமிழ்நாட்டின் முதலமைச்சர் சித்தமருத்துவ பல்கலைக்கழகத்தின் வேந்தராகலாம் என்பது “விதிகளுக்கு முரணானது.” என் ஆளுநர் கூறுவதாக விமர்சனம் செய்து இருந்தார். மேலும், பித்தம் தெளிய சித்தமருத்துவத்தில் மருந்துண்டு எனவும் குறிப்பிட்டு தனது கருத்தை பதிவிட்டு இருந்தார் எம்.பி சு.வெங்கடேசன்.
சென்னை : நேற்று முன்தினம் ஒரிசா கடலோரப்பகுதிகளை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி, நேற்று காலை…
சென்னை : இன்றும், நாளையும் அதிமுக மாவட்டப் பொறுப்பாளர்கள், மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறவுள்ளது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.…
வாஷிங்டன் : உலகின் மிகப் பிரபலமான தொழிலதிபர்களில் ஒருவராகவும், டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ், மற்றும் எக்ஸ் சமூக வலைதளத்தின் தலைமை…
சென்னை : அரசு சேவைகளை எளிதாக்கும் 'எளிமை ஆளுமை' திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார். இந்தத் திட்டம்,…
சண்டிகர் : இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 பிளேஆஃப்களுக்கான களம் தயாராக உள்ளது. இன்று இரவு 7 மணிக்கு…
சென்னை : தமிழகத்தில் 2 மாவட்டங்களுக்கு இன்று அதி கனமழை பெய்வதற்கான ரெட் அலெர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதாவது, நீலகிரி,…