கொடைக்கானலில் முக்கிய சுற்றுலாத்தலங்கள் மூடல்! சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி மறுப்பு!

Published by
பாலா கலியமூர்த்தி

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் பராமரிப்பு பணி காரணமாக மறு உத்தரவு வரும் வரை முக்கிய சுற்றுலா தலங்கள் தற்காலிகமாக மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மறு உத்தரவு வரும் வரை கொடைக்கானலில் முக்கிய சுற்றுலா தலங்களில் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என வனத்துறை தெரிவித்துள்ளது. அதன்படி, கொடைக்கானலில் முக்கிய சுற்றுலா தலங்களான மோயர் சதுக்கம், பைன் மரக்காடுகள், தூண் பாறை, குணா குகை உள்ளிட்ட இடங்களுக்கு செல்ல அனுமதி இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொடைக்கானலில் வனத்துறை கட்டுப்பாட்டில் பைன் மரக்காடுகள், தூண் பாறை, குணா குகை உள்ளிட்ட சுற்றுலா தலங்கள் அமைந்துள்ளது. கொடைக்கானல் வரும் சுற்றுலா பயணிகள் இந்த‌ சுற்றுலாத‌ல‌ங்கள் அனைத்தையும் கண்டு ரசிப்பது வழக்கம். இந்த சுற்றுலா தலத்தில் கடந்த சில தினங்களாக வாகன நிறுத்தும் இடம், கழிப்பறை உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தி தர பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது. அதுமட்டுமில்லாமல், கடந்த சில நாட்களாக மழை பெய்து வருவதால், சாலைகள் பாதிக்கப்பட்டுள்ளன. இதில் சமீபத்தில் சாலை விபத்தும் ஏற்பட்டிருந்தது.

இதுபோன்று சூழல் நிலவி வந்தாலும், சுற்றுலா பயணிகள் நாள்தோறும் சரளமாக வருகை புரிந்து வருகின்றனர். இந்த நிலையில், கொடைக்கானலில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்களான மோயர் சதுக்கம், பைன் மரக்காடுகள், தூண் பாறை, குணா குகை உள்ளிட்ட உள்ளிட்ட இடங்களில் பராமரிப்பு பணிகள் காரணமாக தற்காலிகமாக மூடப்படுவதாகவும், இந்த இடங்களில் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி இல்லை எனவும் வனத்துறை தெரிவித்துள்ளது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

டாஸ்மாக் பணியாளர்களுக்கு 2000 ஊதிய உயர்வு – டாஸ்மாக் நிர்வாகம் அதிரடி.!

சென்னை : டாஸ்மாக் ஊழியர்களுக்கான சம்பள உயர்வு அறிவிப்பை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, டாஸ்மாக் மேற்பார்வையாளர்கள், விற்பனையாளர்கள், உதவி…

24 minutes ago

தமிழ்நாடு காவல்துறையில் 33 உயரதிகாரிகள் பணியிட மாற்றம்.!

சென்னை : தமிழ்நாடு காவல்துறையில் 33 ஐ.பி.எஸ்.உயரதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு இன்று (ஜூலை 14, 2025)…

44 minutes ago

நாளை ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம்: சிதம்பரம் ரயிலில் புறப்பட்ட மு.க.ஸ்டாலின்.!

கடலூர் : கடலூர் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக இராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் இரயிலில் பயணம் மேற்கொண்டார்.…

2 hours ago

சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்திற்கு அதிரடி மாற்றம்.!

சென்னை : சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம், ராஜஸ்தான் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக மாற்றப்பட்டுள்ளார். அதேசமயம்,…

2 hours ago

லண்டனில் சிறிய ரக விமானம் தரையில் விழுந்து நொறுங்கி விபத்து – 4 பேர் பலி.!

சவுத்எண்ட் : லண்டன் சவுத்எண்ட் விமான நிலையத்தில் நேற்றைய தினம் (ஜூலை 13) மாலை 4 மணியளவில் ஒரு சிறிய…

2 hours ago

பட ஷூட்டிங்கில் ஸ்டண்ட் மாஸ்டர் பலி.., இயக்குநர் பா.ரஞ்சித் மீது வழக்குப்பதிவு.!

சென்னை : நாகப்பட்டினம் மாவட்டம் விழுந்தமாவடியில் இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் நடைபெற்று வந்த 'வேட்டுவம்' படப்பிடிப்பின்போது, நேற்றைய தினம் (ஜூலை 13)…

3 hours ago