ManishKashyap case. [Image Source : FACEBOOK/ TAMIL NADU GOVERNMENT SERVANTS ASSOCIATION]
மணீஷ் காஷ்யப் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் பதிவான வழக்கை நீக்க கோரிய வழக்கில், தமிழக அரசு வாதம்.
மணீஷ் காஷ்யப் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்ய முடியாது என்று தமிழ்நாடு அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் பதிவான வழக்கை நீக்க கோரிய வழக்கில் உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம் வைத்து வருகிறது.
தமிழகத்தில் வட மாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவது போல் போலி வீடியோ பரப்பிய புகாரில் பீகார் யூடியூபர் மணீஷ் காஷ்யப் கைதானார். பீகார் மற்றும் தமிழகத்தில் அவர் மீது தனித்தனி எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. போலி வீடியோ பரப்பிய புகாரில் பீகாரைச் சேர்ந்த யூடியூபர் மணீஷ் காஷ்யப் மீது பல்வேறு வழக்குகள் பதியப்பட்ட நிலையில், கடந்த 6-ஆம் தேதி தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் (NSA) கீழ் தமிழ்நாடு போலீசார் கைது செய்தனர்.
இதையடுத்து, யூடியூபர் மணீஷ் காஷ்யப், தன் மீது பதியப்பட்ட பல்வேறு வழக்குப்பதிவுகளை இணைக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். இதுதொடர்பாக தமிழக அரசு பதிலளிக்க நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியிருந்தது. இந்த நிலையில், மணீஷ் காஷ்யப் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்ய முடியாது என்று தமிழ்நாடு அரசு தரப்பில் உச்சநீதிமன்றத்தில் வாதம் முன் வைக்கப்பட்டுள்ளது.
குஜராத் : மாநிலத்தில் ஆனந்த் மற்றும் வதோதரா மாவட்டங்களை இணைக்கும் மஹிசாகர் ஆற்றின் மீது அமைந்த காம்பிரா-முக்பூர் பாலத்தின் ஒரு…
சென்னை : தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் (TNDALU), 2025-2026 கல்வியாண்டிற்கான 3 ஆண்டு எல்.எல்.பி. (LL.B) சட்டப்படிப்பு…
சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று (11-07-2025) தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும்…
அமெரிக்கா : இந்திய விண்வெளி வீரர் குரூப் கேப்டன் சுபான்ஷு சுக்லா மற்றும் ஆக்சியம்-4 (Ax-4) பயணக் குழுவினர், சர்வதேச…
வாஷிங்டன் : அமெரிக்க தொழிலதிபர் எலான் மஸ்க், “அமெரிக்கா கட்சி” (America Party) என்ற புதிய அரசியல் கட்சியைத் தொடங்குவதாக…
கோவா : ஜூலை 9 அன்று, கோவா அமைச்சரவை, ராட்வீலர் மற்றும் பிட்புல்ஸ் உள்ளிட்ட “கொடூரமான” நாய் இனங்களின் இறக்குமதி,…