புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள திருமயம் பகுதியில் நடைபெற்ற மஞ்சுவிரட்டு போட்டியில், மாடு முட்டி ஒருவர் உயிரிழப்பு.
தீபாவளி பண்டிகையையொட்டி புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள திருமயம் பகுதியில் மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் கலந்துகொள்ள மதுரை, புதுக்கோட்டை, சிவகங்கை, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து காளைகள், மாடுகள் கொண்டு வரப்பட்டன. 500க்கும் மேற்பட்ட காளைகள் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் இதில் கலந்து கொண்டனர்.
இந்த போட்டியை காண ஏராளமான மக்கள் திருமயம் பகுதியில் .கூடியிருந்தனர். இந்நிலையில் திருமயம் மஞ்சுவிரட்டில் மாடு முட்டியதில் 50 வயது மதிக்கத்தக்க ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் மாடு முட்டி 90 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது, இதனை அடுத்து மஞ்சுவிரட்டு போட்டியை நிறுத்த வட்டாட்சியர் வட்டாட்சியர் பிரவீனா மேரி நிறுத்துமாறு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
மணிப்பூர் : சுராசந்த்பூர் மாவட்டத்தில் 60 வயது பெண் உட்பட காரில் பயணித்த நான்கு பேரை அடையாளம் தெரியாத நபர்கள்…
சென்னை : திருவள்ளூர் மாவட்டம் களம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில், புரட்சி பாரதம் கட்சித்…
சென்னை : சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவிலில் நடந்த சம்பவத்தில், கோவில் தற்காலிக ஊழியரான அஜித்குமார்…
நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் உலகளவில் ரசிகர்களால் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட "ஸ்க்விட் கேம் சீசன் 3" வெளியாகியுள்ளது. தென் கொரியாவைச் சேர்ந்த இந்த…
சென்னை : கடந்த சில நாட்களாகவே சினிமாவட்டாரத்தில் ஹாட் டாப்பிக்காக இருந்த ஒரு விஷயம் என்னவென்றால் நடிகர் சிம்புவும் இயக்குநர் வெற்றிமாறனும்…
சிவகங்கை : மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக ஊழியராகப் பணியாற்றிய அஜித்குமார் (29) என்ற இளைஞர்,…