சுதந்திர தினவிழாவை முன்னிட்டு சென்னையில் அணிவகுப்பு ஒத்திகை.
வரும் ஆகஸ்ட் 15-ம் தேதி நாடு முழுவதும் 75-வது சுதந்திர தினவிழா கொண்டாடப்படவுள்ளது. இந்நிலையில், தமிழகத்தை பொறுத்தவரையில், கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக மிகவும் எளிய முறையில் சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டது.
அந்த வகையில், இந்த ஆண்டு தமிழகத்தின் நோய் தொற்றின் தீவிரம் குறைந்துள்ள நிலையில், சுதந்திர தினவிழாவுக்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனையடுத்து, சென்னையில் சுதந்திர தினவிழாவுக்காக, ராஜாஜி சாலையில், சுதந்திர தினவிழா ஒத்திகை நடைபெறுகிறது.
கடந்த 7-ம் தேதி முதல் கட்ட ஒத்திகை நடைபெற்ற நிலையில், இன்று இரண்டாம் கட்ட ஒத்திகை நடைபெறுகிறது. வரும் 13-ம் தேதி 3-ம் கட்ட ஒத்திகை நடைபெறவுள்ளது. இந்த ஒத்திகை நிகழ்வுக்காக காமராஜர் சாலை மற்றும் ராஜாஜி சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்று காரணமாக, கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை கைக்கொண்டு இந்த சுதந்திர தினவிழா நடைபெறவுள்ளது.
லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட், இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் (ஜூன்…
மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது இதன் காரணமாக…
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…
சென்னை : 2025 நீட் (NEET-UG) தேர்வு முறைகேடு தொடர்பாக மத்திய புலனாய்வு அமைப்பு (CBI) மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஒரு…
ரஷ்யா : இஸ்ரேல் vs ஈரான் இடையே 11-வது நாளாக கடுமையாக போர் நடைபெற்று வருகிறது. இந்த போர் எப்போது முடிவுக்கு…
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…