[Image Source : FACEBOOK/VAIKO]
சென்னை எழும்பூரில் மதிமுக மண்டல செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற பின் செய்தியாளர்களிடம் பேசிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, மறைந்த முதலமைச்சர் அண்ணாவின் பிறந்தநாளான செப்.15ம் தேதி மதுரையில் மதிமுக எழுச்சி மாநாடு நடத்த உள்ளதாக அறிவித்தார். நாங்கள் நிதிக்கு கஷ்டப்பட்டாலும், தொண்டர்களின் நிதியை பயன்படுத்தி கட்சியை நடத்திக் கொண்டு வருகிறோம் என்றார்.
இதன்பின் பேசிய அவர், இந்தியா கூட்டணி மிகப்பெரிய சக்தியாக உருவெடுத்துள்ளது. நாடாளுமன்ற தேர்தலில் தொகுதி குறித்து நான் திமுகவிடம் பேசவும் இல்லை. அது பற்றி சிந்திக்கவும் இல்லை. தற்போது பேச்சுவார்த்தை இல்லை, திமுகவுடன் பக்க பலமாக இருப்பேன். தமிழகத்தில் திராவிட இயக்கங்களை யாராலும் அசைக்க முடியாது, இந்துத்துவா தத்துவங்கள் இங்கே கால் ஊன முடியாது. பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நடைபயணம் உள்ளிட்ட எது வேண்டுமானாலும் பண்ணலாம்.
ஆனால் தமிழகத்தில் திராவிட இயக்கங்களின் பெரியாரும் அண்ணாவும் இயற்றிய சிந்தனை ஓட்டத்தை யாராலும் அகற்ற முடியாது. நாடாளுமன்ற தேர்தலில் திமுக அணி தான் வெற்றி பெறும். இந்தியா கூட்டணி ஆலோசனைக்கு கூட்டத்துக்கு நானும் மும்பைக்கு செல்கிறேன், எனக்கும் அழைப்பு வந்திருக்கிறது என்றார். மேலும், சிலிண்டர் விலை குறைப்பு குறித்து கூறுகையில், ஒட்டகத்தின் மீது பாரத்தை ஏற்றிவிட்டு, ஒரு துரும்பை மட்டும் எடுத்து விடுவதுபோல கேஸ் சிலிண்டரின் விலையை மத்திய அரசு குறைத்துள்ளதாகவும் விமர்சித்தார்.
டெல்லி : தங்கக் கடத்தல் மற்றும் பணமோசடி வழக்கு தொடர்பாக கன்னட நடிகை ரன்யா ராவுக்குச் சொந்தமான ரூ.34.12 கோடி…
பர்மிங்காம் : இந்திய அணிக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்று வருகிறது. ஷுப்மான் கில்லின் இரட்டை சதத்தால்…
பொள்ளாச்சி : பொள்ளாச்சியைச் சேர்ந்த குருதீப் என்ற 10ஆம் வகுப்பு மாணவர், தனியார் பள்ளியில் பயின்று வந்த நிலையில், 2025ஆம்…
காரைக்கால் : மயிலாடுதுறை அருகே தமிழக வாழ்வுரிமை கட்சியின் காரைக்கால் மாவட்ட நிர்வாகி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை…
பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் இந்திய அணி 587 ரன்களை குவித்துள்ளது. இந்திய அணிக்கு தூணாக நின்று…
சென்னை : திருப்புவனம் இளைஞர் மரணத்தை கண்டித்து நாளை (ஜூலை 3, 2025) எழும்பூர், ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற இருந்த…