மாவட்டந்தோறும் 8 கி.மீ தூரத்திற்கு நடைபாதை.! அடுத்த மாதம் துவக்கம்.. அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு.!

Published by
மணிகண்டன்

இன்று கன்னியகுமாரியில் மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமையில், பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட முக்கிய அரசு அதிகாரிகள், பொதுமக்கள் , மாணவர்கள் என பலர் ‘நடப்போம் நலம்பெறுவோம்’ எனும் பெயரில் நீண்ட தூரம் நடைபயணம் மேற்கொண்டனர்.

இந்த நடைப்பயணத்தின் போது செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசுகையில், ஜப்பானில் தலைநகர் டோக்கியோவில் 8 கி.மீ தூரம் வரையில் பொதுமக்கள் நடப்பதற்காக மட்டுமே நடைபாதை  உருவாக்கப்பட்டுள்ளது.

அதே போல, தமிழகம் முழுவதும், 38 மாவட்டங்களில் 8 கி.மீ தூரத்திற்கு நடைபாதை தேர்வு செய்யும் பணி துவங்கப்பட்டுள்ளது. கடந்த நிதிநிலை அறிக்கையில் இத்திட்டம் அறிவிக்கப்பட்டு இருந்தது. இதன் முன் ஏற்பாடாக கன்னியாகுமாரியில் பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ், மாவட்ட ஆட்சியர், நூற்றுக்கணக்கான மாணவர்கள் கலந்துகொண்டனர்.

மாவட்டந்தோறும் அமைக்கப்பட உள்ள 8 கிமீ  நடைபாதையில், பாதை இரு புறமும் மரங்கள், ஒவ்வொரு 2 கி.மீ தூரத்திற்கும் இருக்கைகள், தூர கணக்கீடு பதாகைகள், ஆகியவை அமைக்கப்பட உள்ளது.

மாதத்தின் முதல் ஞாயிற்று கிழமைகளில் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் ஹெல்த் கேம்ப் நடத்தப்படும். அப்போது சர்க்கரை நோய், ரத்த கொதிப்பு உள்ளிட்டோருக்கு இலவச பரிசோதனை, மருத்துவம் வழங்கப்படும். நடை பாதையில் நடப்போருக்கு அரசு சார்பில் குடிநீர், கடலை மிட்டாய், வாழைப்பழம் என சத்தான ஆகாரங்கள் கொடுக்கப்படும். இன்றைய சோதனை நடைபயணம் தொடர்ந்து, அடுத்த மாதம் அல்லது அடுத்த மாத இறுதியில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களால் இந்த நடைபாதை திட்டம் தமிழகம் முழுவதும் துவங்கப்படும்.

Published by
மணிகண்டன்

Recent Posts

”புதிய கட்சி தொடங்கிய ஈலோன் மஸ்க்” – டிரம்ப் என்ன சொன்னார் தெரியுமா?

வாஷிங்டன் : டெஸ்லா நிறுவனர்  எலான் மஸ்க், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்புடனான மோதலைத் தொடர்ந்து, நேற்றைய தினம் ''அமெரிக்கா…

26 minutes ago

”பிரிக்ஸை ஆதரிக்கும் நாடுகளுக்கு 10 % கூடுதல் வரி” – உலக நாடுகளை எச்சரிக்கும் டிரம்ப்.!

வாசிங்டன் : பிரேசிலில் நடைபெற்று வரும் பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் பங்கேற்கும் நாடுகள், அமெரிக்காவின் பெயரைக் குறிப்பிடாமல், ஈரான் மீதான சமீபத்திய…

54 minutes ago

18 அடி நீளம் கொண்ட ராஜநாகத்தை லாவகமாக பிடித்த பெண் வன ஊழியரின் துணிச்சல்.!

திருவனந்தபுரம்: திருவனந்தபுரம் மாவட்டம் காட்டாக்கடை அருகே உள்ள குடியிருப்புப் பகுதியின் அருகில் உள்ள ஓடையில் பதுங்கியிருந்த 18 அடி நீளமுள்ள ராஜநாகத்தை…

1 hour ago

நில மோசடி விவகாரம்: நடிகர் மகேஷ்பாபுவுக்கு நுகர்வோர் ஆணையம் நோட்டீஸ்.!

தெலுங்கானா: டோலிவுட் சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு ஒரு ரியல் எஸ்டேட் சர்ச்சையில் சிக்கியுள்ளார். ஆம், ஒரு ரியல் எஸ்டேட்…

2 hours ago

நண்பர்களுடன் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய எம்.எஸ்.தோனி.!

சென்னை : பேட்டிங் அதிரடி சூறாவளி, விக்கெட் கீப்பிங்கில் மின்னல் வேகம், கேப்டன்ஷிப்பின் உச்சம் தொட்ட தமிழகத்தின் தத்துப்பிள்ளையான 'கேப்டன்…

3 hours ago

அமெரிக்காவின் டெக்சாஸை புரட்டிப்போட்ட வெள்ளம்.., 28 குழந்தைகள் உட்பட 80 பேர் பலி.!

டெக்சாஸ் : அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தின் தென்-மத்திய பிராந்தியத்தில் உள்ள கெர் கவுண்டியில் கனமழை பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. டெக்சாஸ்…

5 hours ago