சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் அதிரடியாக ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் மா.சுப்பிரமணியன்.
தமிழகத்தில் கொரோனா வைரஸின் தீவிர பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தற்போது சில மாவட்டங்களில் தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில், தமிழக அரசு சில கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது.
இந்நிலையில், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில், அதிகாலையில் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், சென்னை மாநகராட்சி ஆணையர் ஆகியோர் உடனிருந்தனர்.
மேலும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் கண்காணிப்பு பணிகளை தீவிரமாக மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். அதன்பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், கொரோனா பரிசோதனை சான்றிதழ் மற்றும் இரண்டு கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களை தவிர்த்து, நோய் அறிகுறிகள் இருப்பவர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை உடனடியாக மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும், கடந்த நான்கு நாட்களில் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் 270 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார் .
தெஹ்ரான்: ஈரானின் மூத்த மதகுரு கிராண்ட் ஆயத்துல்லா நாசர் மகாரெம் ஷிராஸி, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் இஸ்ரேல்…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜூன் 30, 2025) சென்னையில் 120 மின்சாரப் பேருந்துகளின் சேவையை வியாசர்பாடி…
சேலம் :பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல் தொடர்ந்து…
கொல்கத்தா : மேற்கு வங்காளத்தில் உள்ள ஒரு சட்டக் கல்லூரியில் மாணவி ஒருவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகக் கூறப்படும்…
சென்னை : நேற்று கச்சத்தீவு அருகே ராமேஸ்வரம் மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி…
சென்னை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்தில் அஜித் என்ற இளைஞரின் மரணம் தொடர்பாக, ஆறு காவலர்கள் இடைநீக்கம்…